search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நெல்லை மாவட்டத்தில்  பொது விநியோக திட்ட குறைதீர்க்கும் முகாம்- நாளை மறுநாள் நடக்கிறது
    X

    கலெக்டர் கார்த்திகேயன்

    நெல்லை மாவட்டத்தில் பொது விநியோக திட்ட குறைதீர்க்கும் முகாம்- நாளை மறுநாள் நடக்கிறது

    • ஒவ்வொரு மாதமும் 2-வது சனிக்கிழமையன்று நெல்லை மாவட்டத்தின் அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும் பொது விநியோகத்திட்ட மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடத்தப்படுகிறது.
    • இந்த மாதம் நாளை மறுநாள் 2-வது சனிக்கிழமை நடை பெறும். இக்குறைதீர் முகாமில் சேவைகளை மக்கள் பயன்படுத்தி கொள்ளலாம்.

    நெல்லை:

    நெல்லை மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்ப தாவது:-

    பொது விநியோக திட்டத்தின் சேவைகளை அனைத்து தரப்பு மக்களுக்கும் வழங்குவதன் பொருட்டு ஒவ்வொரு மாதமும் 2-வது சனிக்கிழமையன்று நெல்லை மாவட்டத்தின் அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும் பொது விநியோகத்திட்ட மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடத்தப்படுகிறது. அதன்படி இந்த மாதம் நாளை மறுநாள் 2-வது சனிக்கிழமை நடை பெறும். இக்குறைதீர் முகாமில் சேவைகளை மக்கள் பயன்படுத்தி கொள்ளலாம்.

    இதில் புதிதாக குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம்,புதிய குடும்ப அட்டை அல்லது நகல்அட்டை கோரி விண்ணப்பித்தல் மேற்கொள்ளலாம்.

    குடும்ப அட்டையில் கைபேசி எண் பதிவு, மாற்றம் செய்தல், பொதுவிநியோக திட்ட கடைகளின் செயல்பாடுகள் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் தரம் குறித்து புகார் அளித்தல், தனியார் சந்தையில் விற்கப்படும் பொருட்கள் மற்றும் சேவை குறைபாடுகள் குறித்த புகார் அளித்தல் உள்ளிட்ட சேவைகள் மேற்கொள்ளப்படும்.

    குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கல், முகவரி மாற்றம் மற்றும் புதிய குடும்ப அட்டை, நகல் குடும்ப அட்டை பெற விண்ணப்பிக்கச் செல்லும் பயனாளர்கள் உரிய ஆவணங்களுக்குரிய ஆதார் அட்டை, பிறப்பு அல்லது இறப்பு சான்று, குடியிருப்பு முகவரிக்கு ஆதாரமான ஆவணங்கள் ஆகியவற்றினை எடுத்து செல்ல வேண்டும்.கைபேசி எண் பதிவு, மாற்றம் செய்வதற்கு ஏதுவாக சம்பந்தப்பட்ட கைபேசியினை கொண்டு செல்ல வேண்டும். இந்த முகாம் மற்றும் பொது விநியோகத்திட்ட செயல்பாடுகள் குறித்த புகார்களுக்கு நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலக பொது விநியோகத்திட்ட கட்டுப்பாட்டு அறை எண்: 93424 71314-க்கு தொடர்பு கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    Next Story
    ×