search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பொது வினியோகத்திட்ட மக்கள் தொடர்பு முகாம்; நாளை நடக்கிறது
    X

    கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ்.

    பொது வினியோகத்திட்ட மக்கள் தொடர்பு முகாம்; நாளை நடக்கிறது

    • காலை 10 மணி முதல் மதியம் 1 வரை நடைபெற உள்ளது.
    • வேதாரண்யம் தாலுகாவில் பிரிஞ்சிமூலை கிராமத்தில் முகாம் நடைபெற உள்ளது.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-

    நாகை மாவட்டத்தில் உள்ள அனைத்து தாலுகாக்களிலும் பொது வினியோகத்திட்ட மக்கள் தொடர்பு முகாம் நாளை (சனிக்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 1 வரை நடைபெற உள்ளது.

    அதன்படி, கீழ்வேளூர் தாலுகாவில் காரப்பிடாகை வடக்கு கிராமத்திலும், நாகை தாலுகாவில் கொத்தமங்கலம் (கோதண்டராஜபுரம்) கிராமத்திலும், திருக்குவளை தாலுகாவில் வாழக்கரை கிராமத்திலும், வேதாரண்யம் தாலுகாவில் பிரிஞ்சிமூலை கிராமத்திலும் முகாம் நடைபெற உள்ளது.

    எனவே, பொதுமக்கள் மேற்படி முகாமில் குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கல், செல்போன் எண் மாற்றம், புதிய குடும்ப அட்டை மற்றும் நகல் குடும்ப அட்டைக்கு விண்ணப்பித்தல் மற்றும் பொது விநியோக திட்டம் சார்ந்த அனைத்து கோரிக்கைகளுக்கு விண்ணப்பித்து பயன்பெறலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×