ஆதரவற்ற முதியோர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல்

அத்தியாவசிய பொருட்களான தேங்காய் எண்ணெய், சீயாக்காய் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் வழங்கப்பட்டது.இளைஞர் நற்பணி மன்ற நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
Published on

நாகப்பட்டினம்:

நாகப்பட்டினம் மாவட்டம் சாமந்தான்பேட்டையில் அன்னை அமைந்துள்ள அனுபவம் ஆதரவற்றோர் முதியோர் இல்லத்தில் வசிக்கும் முதியோர்களுக்கு மக்கள் முன்னேற்ற பொதுநல சங்கத்தின் மாநில தலைவர் சமூக சேவகர் டாக்டர் என் விஜயராகவன், தலைமையில், மாவட்ட ஆலோசகர் பழனிவேல் முன்னிலையில் வேஷ்டி, சர்ட், பனியன், துண்டுகள், மருத்துவ பொருட்கள், வலி நிவாரணி தைலங்கள், அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் அத்தியாவசிய பொருட்கள், தேங்காய் எண்ணெய், சீயாக்காய், ஷாம்பு, துணிசோப், குளியல் சோப், பற்பசை, பிரஷ், உள்ளிட்ட பொருட்களை வழங்கி வழங்கினர்

இந்நிகழ்வில்.மாவட்ட ஓட்டுனர் அணி தலைவர் திருமலை ஐய்யப்பன், மாவட்ட மீனவரனி, தலைவர் ராஜீ மாவட்ட மகளிரணி செயலாளர், காணிக்கை மேரி ஒன்றிய மகளிரணி பொறுப்பாளர், மாரியம்மாள் ஒன்றிய மீனவரணி தலைவர், சூர்ய மூர்த்தி திருமருகல் ஒன்றிய இணைச்செயலாளர், சந்தோஷ் மற்றும் மாவட்ட ஒன்றிய நகர பேரூர் அனைத்து சார்பு அணி நிர்வாகிகள், இளைஞர் நற்பணி மன்றத்தின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com