விவசாயிகளுக்கு மானியத்தில் களை எடுக்கும் எந்திரங்கள் வழங்கல்

நெல் வரிசை நடவு வயல்களில் களை எடுக்கும் எந்திரங்கள் விவசாயிகளுக்கு மானியத்தில் வழங்கப்பட்டது.வயல்களில் எந்திரம் மூலம் களை எடுப்பதால் வேலை ஆட்களின் தேவை குறையும்.
விவசாயிகளுக்கு மானியத்தில் களை எடுக்கும் எந்திரங்கள் வழங்கல்
Published on

ஆலங்குளம்:

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் உலக வங்கியின் நிதி உதவியுடன் இயங்கும் நீர்வள நிலவள திட்டத்தின் சிற்றாறு பாசனப் பகுதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட 10 விவசாயிகளுக்கு நெல் வரிசை நடவு வயல்களில் களை எடுக்கும் எந்திரங்கள் மானியத்தில் வழங்கப்பட்டது.

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் அம்பை நெல் ஆராய்ச்சி நிலையத்தின் இணை பேராசிரியர் மற்றும் தலைவர் சரவணன் நெல் வரிசை நடவு வயல்களில் எந்திரம் மூலம் களை எடுப்பதால் வேலை ஆட்களின் தேவை குறையும்.

மேலும் பயிர்களுக்கு காற்றோட்டம் சீராகும் போன்ற சில பயன்களை கூறி விவசாயிகளுக்கு எந்திரங்கள் வழங்கினர். நிகழ்ச்சியில் இணை பேராசிரியர் ரஜினிமாலா உடனிருந்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com