search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வக்கீல்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
    X

    ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வக்கீல் சங்கத்தினர்.

    வக்கீல்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

    • காவிரி நீரை தர மறுக்கும் கர்நாடக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.
    • கோர்ட்டு பணிகளை ஒருநாள் புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தின் முன்பு காவிரி நதிநீர் ஆணைய உத்தரவின் படியும் உச்ச நீதிமன்ற உத்தரவின் படியும் காவிரி நீரை தர மறுக்கும் கர்நாடக அரசை கண்டித்தும், பெற்று தர முயற்சிகாத மத்திய அரசை கண்டித்தும் காவிரி கூட்டியக்கம் சார்பில நடைபெறும் முழு அடைப்பு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து சீர்காழி வக்கீல்கள் சங்கம் சார்பில் நீதிமன்ற பணிகளை ஒருநாள் புறக்கணித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

    வழக்குரைஞர் சங்க தலைவர் ஜீவானந்தம் தலைமையில், செயலாளார் மணிவண்ணன் , பொருளாளர் ராம்குமார் முன்னிலையில் துணைத் தலைவர்கள் கவிதா, தாமஸ் குமார், துணை செயலாளர்கள் சுதா,ஆனந்த ,செந்தில்குமார் ,விஜய் பொருளாளர் ராம்குமார் மூத்த வழக்கறிஞர்கள் வீரமணி, சுந்தரையா,வெங்கடேசன், ரங்கராஜ் அப்துல்லாசா,குமரேசன்,ஆத்மநாதன்,கார்த்திக் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×