search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சிறப்பாக பணியாற்றிய ரேஷன் கடை ஊழியர்களுக்கு பரிசுகள்
    X

    சிறப்பாக பணியாற்றிய ஊழியர்களுக்கு கலெக்டர் துரை ரவிச்சந்திரன் சான்றிதழ் வழங்கிய காட்சி.

    சிறப்பாக பணியாற்றிய ரேஷன் கடை ஊழியர்களுக்கு பரிசுகள்

    • ரேசன்கடை விற்பனையாளர்கள் மற்றும் எடையாளர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் மாநில அளவிலும் , மாவட்ட அளவிலும் பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படுகிறது.
    • தென்காசி மாவட்ட அளவில் தேர்வுசெய்யப்பட்ட ரேஷன் கடை ஊழியர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை மாவட்ட கலெக்டர் துரை.ரவிச்சந்திரன் வழங்கினார்.

    தென்காசி:

    உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் சார்பில் பொதுவிநியோகத்திட்டத்தின் கீழ் செயல்படும் ரேசன் கடைகளில் பணிபுரியும் பணியாளர்களில் சிறப்பாகவும், பொதுமக்கள் வரவேற்கத்தக்க வகையிலும் பணிபுரியும் ரேசன்கடை விற்பனையாளர்கள் மற்றும் எடையாளர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் மாநில அளவிலும் , மாவட்ட அளவிலும் பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படுகிறது. அதன் அடிப்படையில் தென்காசி மாவட்ட கலெக்டர் கூட்டரங்கில் தென்காசி மாவட்ட அளவில் தேர்வுசெய்யப்பட்ட ரேஷன் கடை ஊழியர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை மாவட்ட கலெக்டர் துரை.ரவிச்சந்திரன் வழங்கினார்.

    Next Story
    ×