என் மலர்
உள்ளூர் செய்திகள்

மோட்டார் சைக்கிள் விபத்தில் தனியார் நிறுவன ஊழியர் பலி
- தூத்துக்குடி அண்ணாநகர் 3-வது தெருவை சேர்ந்தவர் அய்யப்பன் (வயது 31). தனியார் நிறுவன ஊழியர்.
- அய்யப்பன் புதுக்கோட்டை அருகே சென்ற போது நிலைதடுமாறி சாலையில் விழுந்தார்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி அண்ணாநகர் 3-வது தெருவை சேர்ந்தவர் அய்யப்பன் (வயது 31). தனியார் நிறுவன ஊழியர். இவர் நேற்றிரவு நெல்லையில் இருந்து தூத்துக்குடி நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். புதுக்கோட்டை அருகே சென்ற போது நிலைதடுமாறி சாலையில் விழுந்தார்.
இதில் பலத்த காயம் அடைந்த அவரை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு அவருக்கு சிகிச்சை பலன் அளிக்காமல் உயிரிழந்தார்.
இதுதொடர்பாக புதுக்கோட்டை இன்ஸ்பெக்டர் வின்சென்ட் அன்பரசி விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






