search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திண்டுக்கல் பஸ்நிலையத்தில் பெர்மிட் பெறாத தனியார் பஸ்கள் நுழைவதால் தகராறு
    X

    கோப்பு படம்

    திண்டுக்கல் பஸ்நிலையத்தில் பெர்மிட் பெறாத தனியார் பஸ்கள் நுழைவதால் தகராறு

    • திண்டுக்கல் பஸ்நிலையத்திற்கு தினந்தோறும் 500-க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பஸ்கள் வந்து செல்கின்றன.
    • விதிமீறி செயல்படும் தனியார் பஸ்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து அதன் உரிமத்தை ரத்து செய்யவேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

    குள்ளனம்பட்டி:

    திண்டுக்கல் பஸ்நிலையத்திற்கு தினந்தோறும் 500-க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பஸ்கள் வந்து செல்கின்றன. பஸ்களின் வருகைக்கேற்ப இடவசதி இல்லாததால் அடிக்கடி நெரிசல் ஏற்பட்டு வருகிறது.

    இதனிடையே பஸ்நிலையத்திற்குள் நுழைய பெர்மிட் பெறாத தனியார் பஸ்களும் அடிக்கடி உள்ளே வந்து பயணிகளை ஏற்றிச்செல்கின்றனர். இதனால் மற்ற டிரைவர்களுக்கும், இவர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வருகிறது.

    இதுமட்டுமின்றி தனியார் பஸ்கள் தாங்கள் பெர்மிட் வாங்கிய வழித்தடத்தில் செல்லாமல் அதிக கலெக்சன் கிடைக்கும் வழித்தடத்தில் இயக்கி வருகின்றனர். இதனால் அரசு பஸ்களுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டு வருகிறது.

    போக்குவரத்துத்துறை அதிகாரிகள் இதுபோல விதிமீறி செயல்படும் தனியார் பஸ்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து அதன் உரிமத்தை ரத்து செய்யவேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

    Next Story
    ×