search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திசையன்விளை அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி தனியார் வங்கி ஊழியர் சாவு- உறவினருக்கு தீவிர சிகிச்சை
    X

    திசையன்விளை அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி தனியார் வங்கி ஊழியர் சாவு- உறவினருக்கு தீவிர சிகிச்சை

    • சுதன்ராஜ், விஷ்ணு ஆகியோர் தனியார் வங்கியில் பணியாற்றி வந்தனர்.
    • விபத்தில் சுதன்ராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    திசையன்விளை:

    வள்ளியூர் அருகே உள்ள மடப்புரத்தை சேர்ந்தவர் தங்கத்துரை. இவரது மகன் சுதன்ராஜ் (வயது 28). இவருக்கு மனைவி, 2 குழந்தைகள் உள்ளனர். அதே பகுதியை சேர்ந்தவர் விஷ்ணு (23). உறவினர்களான இவர்கள் 2 பேரும் தனியார் வங்கியில் ஊழியராக பணியாற்றி வந்தனர்.

    நேற்று இரவு இருவரும் ஒரே மோட்டார் சைக்கிளில் சென்றனர். மோட்டார் சைக்கிளை விஷ்ணு ஓட்டி சென்றார்.

    மோட்டார் சைக்கிள் மீது மோதல்

    மன்னார்புரம் வள்ளியூர் சாலை அருகே சென்றபோது எதிரே வந்த கார், மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டனர். இந்த விபத்தில் சுதன்ராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். விஷ்ணுவிற்கு கால் முறிவு ஏற்பட்டது. இதனையடுத்து அவர் சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் காரை ஓட்டிவந்த கும்பிகுளத்தை சேர்ந்த சங்கர் (34) என்பவர் தப்பி ஓடிவிட்டார். விபத்து குறித்து திசையன்விளை போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    Next Story
    ×