search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மங்களூர்-சென்னை எழும்பூர் எக்ஸ்பிரசில் பெண் பயணியிடம் செக்ஸ் சில்மிஷம் செய்த பாதிரியார் கைது
    X

    மங்களூர்-சென்னை எழும்பூர் எக்ஸ்பிரசில் பெண் பயணியிடம் செக்ஸ் சில்மிஷம் செய்த பாதிரியார் கைது

    • ஓடும் ரெயிலில் பெண் பயணியிடம் செக்ஸ் சில்மிஷததில் ஈடுபட்டது குறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது.
    • அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து ஜாஜிசை கைது செய்தனர்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் மங்களூரில் இருந்து சென்னை எழும்பூருக்கு எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. மங்களூரில் இருந்து இந்த ரெயில் காலை 8 மணியளவில் புறப்படும். அதேபோன்று சம்பவத்தன்றும் சென்னைக்கு புறப்பட்டது.

    இந்த ரெயிலின் பொதுப்பெட்டியில் ஏராளமான பயணிகள் இருந்தனர். மங்களூர் பண்ட்வால் பகுதியை சேர்ந்த ஜாஜிஸ் (வயது45) என்பவரும் பயணம் செய்தார். இவர் கோவையில் உள்ள கிறிஸ்தவ ஆலயத்தில் பாதிரியாராக உள்ளார்.

    அந்த ரெயில் காஞ்சங்காடு ரெயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு சென்றபோது, பொதுப்பெட்டியில் பயணம் செய்த 35 வயது மதிக்கத்தக்க பெண்ணிடம் பாதிரியார் ஜாஜிஸ் செக்ஸ் சில்மிஷத்தில் ஈடுபட்டிருக்கிறார்.

    இதுகுறித்து அந்த பெண், தன்னுடன் பயணித்த கணவரிடம் தெரிவித்தார். அதுபற்றி கேட்டபோது பாதிரியார் அங்கிருந்து தப்ப முயன்றார். இதையடுத்து பாதிரியாரை சக பயணிகள் உதவியுடன் அந்த பெண்ணின் கணவர் பிடித்தார். பின்பு கண்ணூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார்.

    ஓடும் ரெயிலில் பெண் பயணியிடம் செக்ஸ் சில்மிஷததில் ஈடுபட்டது குறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து ஜாஜிசை கைது செய்தனர்.

    Next Story
    ×