என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
கோவையில் தூக்க மாத்திரைகளை தின்று கர்ப்பிணி தற்கொலை முயற்சி
- மாமியார் சரஸ்வதி அடிக்கடி காரணம் இல்லாமல மஞ்சுளாவை திட்டி வந்தார்.
- மஞ்சுளாவை கோவை அரசு ஆஸ்பத்திரி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்துள்ளனர்.
கோவை,
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஸ்ரீமகாதேவபுரத்தை சேர்ந்தவர் சங்கர் கணேஷ். இவரது மனைவி மஞ்சுளா (வயது 27). இவர்களுக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. தற்போது மஞ்சுளா 5 மாத கர்ப்பமாக உள்ளார்.
இந்தநிலையில் இவரது மாமியார் சரஸ்வதி அடிக்கடி காரணம் இல்லாமல மஞ்சுளாவை திட்டி வந்தார். இதற்கு அவரது கணவரும் உடந்தையாக இருந்தார்.
இதனால் கடந்த சில நாட்களாக அவர் மிகுந்த மனவேதனை அடைந்து காணப்பட்டார். சம்பவத்தன்று மீண்டும் மாமியார் -மருமகள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த மஞ்சுளா 20 தூக்க மாத்திரைகளை சாப்பிட்டார். சிறிது நேரத்தில் மயங்கினார்.
இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு மஞ்சுளாவை டாக்டர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
இது குறித்து மகாலிங்கபுரம் போலீசார் கணவர் சங்கர் கணேஷ், மாமியார் சரஸ்வதி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்