வள்ளியூர், தச்சநல்லூரில் நாளை மறுநாள் மின்தடை

வள்ளியூர் மற்றும் நாங்குநேரி துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை மறுநாள் நடைபெற உள்ளது.திலக் நகர், பாபுஜி நகர், சிந்து பூந்துறை உள்ளிட்ட இடங்களில் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது.
வள்ளியூர், தச்சநல்லூரில் நாளை மறுநாள் மின்தடை
Published on

நெல்லை:

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின்பகிர்மான கழகத்தின் நெல்லை கோட்டம் வள்ளியூர் வினியோக செயற்பொறியாளர் வளன் அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது;-

வள்ளியூர் மின்வாரிய கோட்டத்திற்கு உட்பட்ட வள்ளியூர் மற்றும் நாங்குநேரி துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) நடைபெற உள்ளது. இதனால் அன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வினியோகம் தடை செய்யப்படுகிறது. அதன்படி வள்ளியூர் துணைமின் நிலையத்திற்கு உட்டபட்ட சமாதானபுரம், பூங்கா நகர், இ.பி. காலனி, சண்முகாபுரம், வடலிவிளை, நல்ல சமாரியன் நகர், லூத்தர் நகர், கேசவனேரி, ராஜாபுதூர், திருக்குறுங்குடி, நம்பி தலைவன் பட்டயம், ஆவரந்தலை, ஏர்வாடி ஆகிய இடங்களில் மின்தடை ஏற்படும்.

நாங்குநேரி துணை மின்நிலையத்திற்கு உட்பட்ட நாங்குநேரி, ராஜாக்கள்மங்கலம், சிறுமளஞ்சி, பெரு மளஞ்சி, ஆச்சியூர், வாகை குளம், கோவநேரி உள்ளிட்ட இடங்களில் மின்வினியோகம் இருக்காது. இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

நெல்லை நகர்புற வினியோக செயற்பொறி யாளர் முத்துக்குட்டி வெளியிட்டுள்ள அறிக்கையில், தச்சநல்லூர் துணை மின்நிலையத்திற்கு உட்பட்ட தச்சநல்லூர், நல்மேய்ப்பர் நகர், செல்வ விக்ணேஷ் நகர், பாலாஜி அவென்யூ, வடக்கு பாலபாக்யா நகர், தெற்கு பாலபாக்யா நகர், மதுரை ரோடு, திலக் நகர், பாபுஜி நகர், சிவந்தி நகர், கோமதி நகர், சிந்து பூந்துறை, மணிமூர்த்தீஸ்வரம் மற்றும் இருதயநகர் உள்ளிட்ட இடங்களில் நாளை மறுநாள் பராமரிப்பு பணி காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது என குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com