search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பேராவூரணி, திருவையாறு பகுதிகளில் நாளை மின்தடை
    X

    பேராவூரணி, திருவையாறு பகுதிகளில் நாளை மின்தடை

    • மேலத்திருப்புந்துருத்தி துணை மின்நிலையங்களில் நாளை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
    • காலை 9 மணி முதல் மாலை 5மணி வரை மின் வினியோகம் இருக்காது.

    பேராவூரணி:

    பேராவூரணி, சேதுபாவாசத்திரம் சுற்றுவட்டார பகுதிகளில் நாளை 19ம் தேதி (சனிக்கிழமை)மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் பேராவூரணி நகர், சேதுபாவாசத்திரம், பெருமகளூர், குருவிக்கரம்பை, ஒட்டங்காடு, திருச்சிற்றம்பலம், வாட்டாத்திக்கொல்லைக்காடு, திருவத்தேவன், ஆவணம், சித்துக்காடு, புனல்வாசல், துறவிக்காடு, கட்டயங்காடு, மதன்பட்டவூர், செருவாவிடுதி, ரெட்டவயல், நாட்டாணிக்கோட்டை, கள்ளம்பட்டி, கழனிவாசல், பள்ளத்தூர், நாடியம், மல்லிப்பட்டினம், மருங்கப்பள்ளம், செருபாலக்காடு அதன் சுற்றியுள்ள பகுதிகளில் மின்தடை காலை 9 மணி முதல் மாலை 5மணி வரை மின் வினியோகம் இருக்காது.

    இத்தகவலை உதவி செயற்பொறியாளர் கமலக்கண்ணன் தெரிவித்துள்ளார்.

    திருவைாறு:

    திருவைாறு மற்றும் மேலதிருப்புந்துருத்தி துணைமின் நிலையங்களில் நாளை 19ம் தேதி சனிக்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது.

    எனவே இந்த துணை மின்நிலையங்களில் இருந்து மின் விநியோகம் பெறும் நடுக்காவேரி, திருப்பூந்துருத்தி, கண்டியூர், ஆவிக்கரை, தில்லைஸ்தானம், பனையூர், வைத்தியநாதன்பேட்டை, ஆச்சனூர், ராயம்பேட்டை, திங்களூர், திருப்பழமை, அணைக்குடி, விளாங்குடி, திருவையாறு, புனவாசல், மற்றும் உள்ளடக்கிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது.

    இத்தகவலை திருவையாறு மின்வாரிய உதவி செயற் பொறியாளர் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×