என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
வால்பாறையில் மின் வாரிய உதவி என்ஜினீயர்-கிரேன் ஆபரேட்டர் நடுரோட்டில் மோதல்
- குழந்தைக்கு உடல் நிலை சரியில்லை மருந்து வாங்க வந்ததாக கூறினார்
- ஷேக்கல்முடி போலீஸ் நிலையத்தில் புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை,
கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள சோலையாறு அணையை சேர்ந்தவர் ராமச்சந்திரன் (வயது 33). இவர் சோலையாறு அணை மின்வாரியத்தில் உதவி என்ஜினீயராக வேலை பார்த்து வருகி றார். இங்கு ராஜேந்திரன் (50) என்பவர் கிரேன் ஆபரேட்டரக வேலை பார்த்து வருகிறார்.
சம்பவத்தன்று ராமச்ச ந்திரன் பஜாருக்கு காரில் சென்றார். அப்போது அவர் அங்கு ராஜேந்திரனை பார்த்தார். உடனடியாக காரை நிறுத்தி வேலை நேரத்தில் இங்கு என்ன செய்து கொண்டு இருக்கி றாய் என கேட்டார். அதற்கு ராஜேந்திரன் குழந்தைக்கு உடல் நிலை சரியில்லை மருந்து வாங்க வந்ததாக கூறினார். என்னிடம் சொல்லாமல் ஏன் வந்தாய் என ராமச்சந்திரன் கேட்டார்.
அப்போது அவர்களுக்கு இடையே வாக்கு வாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றவே நடுரோட்டில் வைத்து ஒருவரை ஒருவர் மாறி மாறி தாக்கி கொண்டனர். இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் 2 பேரையும் விலக்கி விட்டனர். தாக்குதலில் காயம் அடைந்த 2 பேரும் வால்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்ந்தனர்.
இது குறித்து உதவி என்ஜினீயர் ஷேக்கல்முடி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்