கிருமாம்பாக்கம் அருகே: மனைவி வீட்டுக்கு வர மறுத்ததால் கணவர் தூக்கு போட்டு தற்கொலை

கிருமாம்பாக்கம் அருகே மனைவி வீட்டுக்கு வர மறுத்ததால் கணவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அய்யனார்
அய்யனார்
Published on

புதுச்சேரி:

கிருமாம்பாக்கம் அருகே வண்ணாங்குளம் புது நகர் பகுதியை சேர்ந்தவர் அய்யனார் (வயது 32). இவர் முள்ளோடை பகுதியில் உள்ள சாராய கடையில் கூலி வேலை செய்து வந்தார். 

இவரது மனைவி பூரணி கடந்த ஆண்டு அய்யனார் தனது மனைவி பூரணிக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தி மாமியார் வீட்டுக்கு அனுப்பி வைத்தார். அங்கு  குழந்தை பிறந்து 6 மாதமாகியும் பூரணி குழந்தையுடன் கணவர் வீட்டுக்கு வரவில்லை.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அய்யனார் தனது மனைவியையும், குழந்தையையும் வீட்டிற்கு அழைத்து வர    தனது தந்தை ஆறுமுகத்துடன் மாமியார் வீட்டுக்கு சென்றார்.  ஆனால், பூரணி வர மறுத்து விட்டார். குழந்தைக்கு ஒரு வயது ஆன பின்பு வீட்டுக்கு வருவதாக தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் அய்யனார் மனவருத்தத்தில்  இருந்து வந்தார். 

இந்த நிலையில்  வீட்டில் இருந்து வெளியே சென்ற அய்யனார் வீடு திரும்பவில்லை. இதனால்  அவரது தந்தை ஆறுமுகத்துக்கு சந்தேகம் வந்து வீட்டின் அருகே சென்று பார்த்தார்.

அப்போது அங்குள்ள  வேப்ப மரத்தில் அய்யனார் வேட்டியால் தூக்கு போட்டு தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அய்யனாரை மீட்ட போது அவர் இறந்து போனது தெரியவந்தது. 

இதுகுறித்த புகாரின் பேரில் கிருமாம்பாக்கம் போலீஸ் உதவி சப்&-இன்ஸ்பெக்டர் லூர்துநாதன் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com