மூச்சுதிணறி பள்ளி மாணவி சாவு

சுல்தான்பேட்டையில் மூச்சுதிணறல் ஏற்பட்டு பள்ளி மாணவி திடீரென இறந்து போனார்.
கோப்பு படம்
கோப்பு படம்
Published on

புதுச்சேரி:

வில்லியனூர் அருகே சுல்தான்பேட்டை முகமதியார் நகரை சேர்ந்தவர் கவுஸ்பாஷா. இவர் சோபா கடையில் வேலை செய்து வருகிறார். இவரது மகள் சோபியாபேகம்(வயது15). இவர் அங்குள்ள தனியார் பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி. படித்து வந்தார்.

கடந்த சில நாட்களாக சோபியாபேகம் உடல்நிலை பாதிக்கபட்டிருந்தார். ஆனாலும் படிப்பில் தீவிர கவனம் செலுத்தி வந்ததால் சோபியாபேகம் சரிவர மருந்து-மாத்திரை உட்கொள்வது இல்லை என கூறப்படுகிறது.

இந்த நிலையில் சோபியாபேகம் வீட்டில் இருந்த போது திடீரென அவருக்கு மூச்சுதிணறல் ஏற்பட்டது. 

இதனால் அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர் அருகில் உள்ள டாக்டரிடம் அழைத்து சென்று காண்பித்தனர். பின்னர் டாக்டர் அறிவுறுத்தலின் பேரில் சோபியாபேகத்தை ஆட்டோவில் கதிர்காமம் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே சோபியாபேகம் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து அவரது தந்தை கவுஸ்பாஷா கொடுத்த புகாரின் பேரில் வில்லியனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com