புதுச்சேரி மாநில வன்னியர் சங்க புதிய நிர்வாகிகள் நியமனம்

புதுவை மாநில வன்னியர் சங்க புதிய நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
வன்னியர் சங்க புதிய நிர்வாகிகள் பா.ம.க. மாநில அமைப்பாளர் கணபதியிடம் ஆசிபெற்ற காட்சி.
வன்னியர் சங்க புதிய நிர்வாகிகள் பா.ம.க. மாநில அமைப்பாளர் கணபதியிடம் ஆசிபெற்ற காட்சி.
Published on

புதுச்சேரி:

பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் எம்.பி. ஆகியோர் ஒப்புதலுடன் புதுவை மாநில வன்னியர் சங்க புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களை மாநில வன்னியர் சங்க தலைவர் பு.தா.அருள்மொழி நியமித்துள்ளார். 

அதன்படி புதுவை மாநில வன்னியர் சங்க தலைவராக கவுண்டர்பாளையம் துரை என்கிற ஜெயக்குமார் செயலாளர்களாக மணவெளி முருகன், சிவராந்தகம் நாவப்பன், பொருளாளராக லாஸ்பேட்டை நரசிம்மன், துணை தலைவர்களாக மேட்டுப்பாளையம் பாண்டு ரங்கன், பூரணசிங்க பாளையம் தங்கமணி, சுள்ளியாங்குப்பம் சிவசங்கரன், துணை செயலாளர்களாக கலிதீர்த்தாள்குப்பம் ராஜசேகர், செய்யாள், மாநில வன்னியர் சங்க இளைஞர் அணி செயலாளராக நல்லவாடு ஜெயக்குமார் ஆகியோர் நியமிக்கப்பட்டனர். 

இத்தகவலை மாநில பா.ம.க. அமைப்பாளர் கணபதி தெரிவித்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com