தனியார் நிறுவன மானேஜர் மாரடைப்பால் சாவு

தேவாலயத்துக்கு பிராத்தனைக்கு சென்ற தனியார் நிறுவன மானேஜர் திடீர் மாரடைப்பால் இறந்து போனார்.
கோப்பு படம்
கோப்பு படம்
Published on

புதுச்சேரி:

முத்தியால் பேட்டையில் தேவாலயத்துக்கு பிராத்தனைக்கு சென்ற தனியார் நிறுவன மானேஜர் திடீர் மாரடைப்பால் பரிதாபமாக இறந்து போனார்.

புதுவை முத்தியால்பேட்டை செயின்ட் ரொசோரியா வீதியை சேர்ந்தவர் அலெக்சாண்டர் (வயது48) இவருக்கு அமலோற்பவமேரி என்ற மனைவியும் 13 வயதில் மகளும் மனைவி உள்ளனர். அலெஸ்சாண்டர் புதுவை பாரதி வீதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் விற்பனை மேலாளராக பணிபுரிந்து வந்தார். 

அமலோற்பவமேரி முத்தியால் பேட்டை மெயின் ரோட்டில் உள்ள ஒரு பேஷன் தையல் கடையில் டெய்லராக வேலை செய்து வருகிறார். 

ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை காலையும் அலெக்சாண்டரும் அவரது மனைவி அமலோற்பவ மேரியும் அப்பகுதியில் உள்ள ஒரு தேவாலயத்திற்கு பிரார்த்தனைக்கு செல்வது வழக்கம்.

அதுபோல் கணவன்-மனைவி இருவரும் தேவாலயத்துக்கு பிரார்த்தனைக்கு சென்றனர். 

பிரார்த்தனை முடிந்து தேவாலயத்தில் இருந்து வெளியே வந்த போது அலெஸ் சாண்டருக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி சரிந்தார். உடனே அவரது மனைவி அமலோற்பவமேரி மற்றும் அருகில் இருந்த உறவினர்கள் அலெக்சாண்டரை சிகிச்சைகாக ஒரு ஆட்டோ மூலம் புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். 

அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே அலெக்சாண்டர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இது குறித்து அவரது மனைவி அமலோற்பவ மேரி கொடுத்த புகாரின் பேரில் முத்தியால் பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

தேவாலயத்துக்கு பிரார்த்தனைக்கு சென்ற தனியார் நிறுவன மானேஜர் திடீர் மாரடைப்பல் இறந்து போன சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com