பொது இடத்தில் ரகளை செய்த 6 பேர் கைது

பொது இடத்தில் ரகளை செய்த 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
கோப்பு படம்
கோப்பு படம்
Published on

புதுச்சேரி:

மேட்டுப்பாளையத்தில் மதுபான கடை எதிரே ஒரு கும்பல் மது குடித்து விட்டு பொது மக்களுக்கு இடையூறாக ரகளை செய்து கொண்டிருப் பதாக மேட்டுப்பாளையம் போலீசாருக்கு தகவல் வந்தது. 

இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் கலையரசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ரகளையில் ஈடுபட்ட 3 பேர் கொண்ட கும்பலை மடக்கி பிடித்தனர்.

விசாரணையில் அவர்கள் சண்முகாபுரத்தை அடுத்த பாரதிபுரம் முருகன்கோவில் தெருவை சேர்ந்த சுகுமார் (வயது41), விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூரை சேர்ந்த முருகன்(52), சண்முகாபுரம் மாணிக்க செட்டியார் நகரை சேர்ந்த சீனிவாசன் (48) என்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

இதுபோல் ரெட்டியார் பாளையம் அருகே மதுக்கடை அருகே ரகளை செய்த பூமியான்பேட் லாம்பர்ட் சரவணன் நகரை சேர்ந்த துலுக்கானம் (54) மற்றும் மேரி உழவர்கரை ஈஸ்வரன் கோவில் தெருவை சேர்ந்த அய்யப்பன்(56) ஆகிய 2 பேரை ரெட்டியார்பாளையம் போலீசாரும், தட்டாஞ்சாவடி மார்க்கெட்டிங் கமிட்டி அருகே பொது மக்களுக்கு இடையூறாக தகளையில் ஈடுபட்ட ஜீவானந்தபுரம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த சுதாகர்(25) என்பவரை கோரிமேடு போலீசாரும் கைது செய்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com