search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தேனி மாவட்டத்தில் வாக்குச்சாவடிகள் சீரமைக்கும் பணி
    X

    கோப்பு படம்

    தேனி மாவட்டத்தில் வாக்குச்சாவடிகள் சீரமைக்கும் பணி

    • இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரைப்படி, தேனி மாவட்டத்திற்குட்பட்ட வாக்குச்சாவடிகளை மறுசீரமைக்கும் பணி நடைபெறவுள்ளது.
    • கிராம புற, நகர்புற வாக்குச்சாவடிகளில் வாக்காளர் எண்ணிக்கை அதிகபட்சமாக 1500 வாக்காளர்கள் வரை அனுமதிக்கப்பட்டுள்ளது.

    தேனி:

    இந்திய தேர்தல் ஆணை யத்தின் அறிவுரைப்படி, தேனி மாவட்டத்திற்குட்பட்ட வாக்குச்சாவடிகளை மறுசீரமைக்கும் பணி நடைபெறவுள்ளது. இச்சீரமைக்கும் பணியின் போது கிராம புற, நகர்புற வாக்குச்சாவடிகளில் வாக்காளர் எண்ணிக்கை அதிகபட்சமாக 1500 வாக்காளர்கள் வரை அனுமதிக்கப்பட்டுள்ளது.

    எனவே, வாக்கு ச்சாவடிகளில் வாக்காள ர்களின் எண்ணிக்கை 1500-க்கு மேல் இருப்பின் 2ஆக பிரிக்கப்பட உள்ளது. மேலும் தற்போதுள்ள வாக்குச் சாவடிகள் அமைந்துள்ள பள்ளிகளின் தரம் உயர்த்தப்பட்டிரு ந்தாலும் மற்றும் கட்டிடம் சிதிலமடைந்திருந்தாலும், 2 கி.மீ தொலைவிற்கு அப்பால் வாக்குச்சாவடி அமைந்திருந்தாலும் மாற்றம் செய்யப்பட உள்ளது.

    மேற்படி காரணிகளின் அடிப்படையில் துணை ஆட்சியர் நிலையிலான அலுவலர்களை கொண்டு வாக்குச்சாவடிகளை ஆய்வு செய்யப்பட்டதின் அடிப்ப டையில் மாற்றம் செய்யப்பட வுள்ள விவரங்கள் குறித்த வரைவு வாக்குச்சாவடி பட்டியல் அனைத்து வாக்காளர் பதிவு அலுவலர், உதவி வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலகங்களில் வருகிற 29-ந் தேதி அன்று வெளியிடப்படவுள்ளது.

    எனவே, மேற்குறித்த மாற்றங்கள் தொடர்பான கோரிக்கைகள் ஏதேனும் இருப்பின் பொதுமக்கள் தங்கள் கோரிக்கை மனு க்களை 6.9.2022 தேதிக்குள் சம்மந்தப்பட்ட வருவாய் கோட்டாட்சி யர்கள், வட்டாட்சியர்களிடம் மனு வாக அளித்திடலாம் என தேனி மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட கலெக்டருமான முரளிதரன் ெதரிவித்துள்ளார்.

    Next Story
    ×