search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விவசாய கிணற்றில் மின் மோட்டார் திருட்டு இரும்பு கடைக்காரருக்கு போலீஸ் வலைவீச்சு
    X

    விவசாய கிணற்றில் மின் மோட்டார் திருட்டு இரும்பு கடைக்காரருக்கு போலீஸ் வலைவீச்சு

    • மில்லில் வைக்கப்பட்டிருந்த மின்மோட்டார் காணாமல் போயிருந்தது, இச்சம்பவத்தால் அதிர்ச்சி அடைந்த விவசாயி மதியழகன் அக்கம் பக்கம் தேடிப் பார்த்தார்.
    • தனக்கு சொந்தமான மின் மோட்டார் இரும்பு கடையில் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்,

    பாப்பிரெட்டிப்பட்டி.

    தருமபுரி மாவட்டம் ஏ.பள்ளிப்பட்டியை அடுத்து எச்.புதுப்பட்டி அருகே உள்ள பாப்பம்பாடி கிராமத்தைச் சார்ந்தவர் மதியழகன் (வயது 60). விவசாயி. இவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் ஒரு கிணற்றில் மின்மோட்டார் ஒன்றை வைத்து இருந்தார். அந்தமின் மோட்டார் பழுதடைந்ததால் அவற்றை கழட்டி எடுத்து அருகில் உள்ள தனது கிழங்கு அரவை மில்லில் வைத்திருந்தார்.

    இந்த நிலையில் நேற்று திடீரென அந்த மில்லில் வைக்கப்பட்டிருந்த மின்மோட்டார் காணாமல் போயிருந்தது, இச்சம்பவத்தால் அதிர்ச்சி அடைந்த விவசாயி மதியழகன் அக்கம் பக்கம் தேடிப் பார்த்தார். மின்மோட்டார் கிடைக்கவில்லை. மோட்டார் திருடு போயிருக்கும் என்ற சந்தேகத்தின் பேரில் ஏ,பள்ளிப்பட்டியில் பழைய இரும்பு கடை நடத்தி வரும் வெங்கடேசன் (48) என்பவர் கடையில் தேடிப் பார்த்துள்ளார். அப்போது தனக்கு சொந்தமான மின் மோட்டார் கடையில் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    இதுகுறித்து அவர் ஏ.பள்ளிப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். திருடு போன மின்மோட்டார் மதியழகனுக்கு சொந்தமானது என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக உள்ள வெங்கடேசனை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×