search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கைது
    X

    பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கைது

    • கொல்கத்தாவில் தலைமறைவாக இருந்த ஆண்ட்ரூஸ் கார்டுவெல்லை போலீசார் கைது செய்து விமானம் மூலம் தாம்பரம் கொண்டு வந்தனர்.
    • போலீசார் ஆண்ட்ரூஸ் கார்டுவெல்லை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்‌.

    சென்னை:

    சென்னை கோவிலம்பாக்கம் பகுதி சுசிலா நகரை சேர்ந்த 37 வயதுடைய பெண் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 4-ந் தேதி பள்ளிக்கரணை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    அதில் 2021-ம் ஆண்டு ஓர் மரம் நடும் விழாவில் புனித தோமையார் மலை ஆயுதப்படை சிறப்பு உதவி ஆய்வாளராக உள்ள ஆண்ட்ரூஸ் கார்டுவெல் (வயது 54) என்பவரை சந்தித்ததாகவும், அந்த நேரம் தன் தாயார் இறந்த மன அழுத்தத்தில் இருந்தபோது ஆண்ட்ரூஸ் கார்டுவெல் ஆறுதலாக பேசி தனக்கு திருமணம் ஆகவில்லை என்று கூறியதாகவும், அதே நேரத்தில் தன்னை திருமணம் செய்து கொள்வதாக பேசி இருவரும் கணவன்-மனைவி போல வாழ்ந்து வந்ததாகவும் கூறி உள்ளார்.

    மேலும் அவர் வயதை குறைத்து ஏமாற்றி குடும்பம் நடத்தியது தெரிய வந்ததால் அவரை விட்டு விலக முடிவெடுத்தபோது மார்பிங் செய்த தன்னுடைய அந்தரங்க புகைப்படங்களை காட்டி மிரட்டியதாகவும் தெரிவித்துள்ளார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தியபோது ஆண்ட்ரூஸ் கார்டுவெல் தலைமறைவானார்.

    தலைமறைவான அவரை கைது செய்து நடவடிக்கை எடுக்கக்கோரி அவர் போலீஸ் கமிஷனர் அமல்ராஜிடம் அளித்த மனுவின் பேரில் பள்ளிக்கரணை துணை போலீஸ் கமிஷனர் ஜோஸ் தங்கையா மேற்பார்வையில் சங்கர் நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆல்பின்ராஜ் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தலைமறைவான ஆண்ட்ரூஸ் கார்டுவெல்லை தேடிவந்தனர்.

    கொல்கத்தாவில் தலைமறைவாக இருந்த அவரை கைது செய்து விமானம் மூலம் தாம்பரம் கொண்டு வந்து சிட்லப்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் விசாரணை நடத்தினர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அவரை சிறையில் அடைத்தனர்.

    Next Story
    ×