search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சித்த வைத்தியர் வீட்டை மீண்டும் தோண்டும் போலீசார்
    X

    சித்த வைத்தியர் வீட்டை மீண்டும் தோண்டும் போலீசார்

    • சோழவரம் போலீசார் வழக்குபதிவு செய்து கேசவமூர்த்தியை கைது செய்தனர்.
    • கேசவமூர்த்தியின் வீட்டை சுற்றி மீண்டும் தோண்ட தொடங்கி உள்ளனர்.

    கும்பகோணம்:

    தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே மணல்மேடு கிராமத்தைச் சேர்ந்தவர் அசோக்ராஜன் (வயது 27). இவரை அதே பகுதி சோழபுரம் கிழக்குத் தெருவை சேர்ந்த சித்த மருத்துவர் கேசவமூர்த்தி என்பவர் ஓரினசேர்கைக்கு அழைத்து சென்று அப்போது ஏற்பட்ட தகராறில் வெட்டி கொலை செய்தார். அவரது உடலை கேசவ மூர்த்தி தனது வீட்டில் புதைத்தார். போலீசார் அசோக்ராஜன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அங்கு தோண்டும் போது மற்றொரு மனித தாடை எலும்பு கூடு சிக்கியது. இது குறித்து சோழவரம் போலீசார் வழக்கு பதிவு செய்து கேசவமூர்த்தியை கைது செய்து கும்பகோணம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி திருச்சி சிறையில் அடைந்தனர்.இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆஷித்ராவத் தலைமையில் திருவிடைமருதூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ஜாபர்சித்திக் முன்னிலையில் இன்று மாலை ஜேசிபி எந்திரம் மூலம் கேசவமூர்த்தியின் வீட்டை சுற்றி மீண்டும் தோண்ட தொடங்கி உள்ளனர். இதனால் இந்த கொலை வழக்கு மீண்டும் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.

    Next Story
    ×