என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
கிராம உதவியாளரை தேடும் போலீசார்
Byமாலை மலர்14 July 2022 5:15 AM GMT
- உருட்டு கட்டையால் தாக்கியதில் வாலிபர் படுகாயமடைந்தார்.
- புகாரின்பேரில் தாக்கிய கிராம உதவியாளரை போலீசார் தேடி வருகின்றனர்.
பெரும்பாறை:
திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி அருகே உள்ள நரசிங்கபுரத்தை சேர்ந்தவர் தண்டபாணி என்ற பாலசுப்பிரமணியம் (வயது 60). இவர், மணலூர் ஊராட்சியில் கிராம உதவியாளராக பணியாற்றி வருகிறார்.
சம்பவத்தன்று இவர் பெரும் பாறை அருகே உள்ள மஞ்சள்பரப்பு கிராமத்திற்கு சென்றார். அப்போது பாலசுப்பிரமணியத்துக்கும், அதே ஊரை சேர்ந்த முத்து வேலுக்கும் (45) இடையே தகராறு ஏற்பட்டது. இதனை பார்த்த மஞ்சள்பரப்புவை சேர்ந்த கூலித் தொழிலாளியான சோனைமுத்து (54) தகராறை விலக்கிவிட்டார்.
இதனால் ஆத்திரமடைந்த பாலசுப்பிரமணியம், சோனைமுத்துவை உருட்டு கட்டையால் தாக்கினார். இதில் பலத்த காயமடைந்த அவரை சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்து பாலசுப்பிரமணியம் மீது தாண்டிக்குடி போலீசார் வழக்கு செய்து தேடி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X