தமிழகம் முழுவதும் தியேட்டர்களில் விஜய் பேனர், கட்அவுட் வைக்க போலீஸ் தடை?

'தி கோட்' திரைப்படம் நாளை மறு நாள் (5-ந்தேதி) வெளியாகிறது.விஜய் ரசிகர்கள் கடும் கண்டனங்கங்களை எழுப்பி வருகின்றனர்.
தமிழகம் முழுவதும் தியேட்டர்களில் விஜய் பேனர், கட்அவுட் வைக்க போலீஸ் தடை?
Published on

சென்னை:

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள 'தி கோட்' திரைப்படம் நாளை மறுநாள் (5-ந்தேதி) வெளியாகிறது.

விஜய் அரசியல் பிரவேசம் செய்துள்ள நிலையில் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகம் முழுவதும் இந்த படத்தை வரவேற்று தியேட்டர்களில் ரசிகர்கள் கட்-அவுட் மற்றும் பேனர்களை வைப்பதற்கு மிகுந்த ஆர்வமுடன் உள்ளனர்.

ஆனால் தியேட்டர்களில் விஜய் பட பேனர்களை வைப்பதற்கு போலீசார் தடை விதித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனால் சென்னை உள்பட தமிழகம் முழுவதும் விஜய் ரசிகர்கள் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

எப்போதுமே புதிய படங்கள் வெளியாகும் போது, ரசிகர்கள் தங்களுக்கு பிடித்தமான நடிகர்களின் பேனர் மற்றும் கட்-அவுட்களை படம் வெளியாகும் நாளில் வைத்து அழகு பார்ப்பார்கள்.

பின்னர் அந்த பேனர்கள் அகற்றப்பட்டு விடும். இதுபோன்றே விஜய் ரசிகர்களும் பேனர் வைப்பதற்கு தயாராகி வருகிறார்கள். ஆனால் தியேட்டர்களில் பேனர் மற்றும் கட்-அவுட்களை வைப்பதற்கு விஜய் ரசிகர்களுக்கு இதுவரை அனுமதி அளிக்கப்பட வில்லை.

தங்களது பகுதியில் உள்ள போலீஸ் நிலையங்களில் ரசிகர்கள் சார்பில் முறைப்படி அனுமதி கேட்கப்பட்டுள்ள போதிலும், பாதுகாப்பு காரணங்களை காட்டி போலீசார் உள்ளாட்சி நிர்வாகித்தினரும் அனுமதி மறுத்து வருவது தெரியவந்துள்ளது.

இதனால் தியேட்டர் உரிமையாளர்களும் பேனர் வைப்பதற்கு அனுமதி அளிக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் என்று ஆதங்கப்பட்டார். விஜய் ரசிகர் ஒருவர், இது தொடர்பாக சமூக வலை தளங்களில் விஜய் ரசிகர்கள் கடும் கண்டனங்களையும் பதிவு செய்து வருகிறார்கள்.

இதனை தொடர்ந்து தமிழ்நாடு திரைப்பட பார்வையாளர்கள் சங்கம் சார்பில் சென்னை மாநகராட்சி மேயர் பிரியாவுக்கு மனு ஒன்றை அனுப்பி உள்ளனர்.

அதில் தியேட்டர்களில் புதிய படங்கள் வெளியாகும் போது குறுகிய காலமே வைக்கப்படும். பேனர்களுக்கு உரிய அனுமதியை அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இதற்கிடையே தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை ஏற்றுவதற்கும் அனுமதி கிடைப்பது இல்லை என்று விஜய் கட்சியினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

ஏற்கனவே உள்ள கொடிக் கம்பத்தில் ஏற்றப்பட்டுள்ள விஜய் மக்கள் இயக்க கொடியை அகற்றி விட்டு புதிய கொடியை ஏற்றுவதற்கு கூட போலீசார் அனுமதி மறுப்பதாக கட்சியினர் தெரிவித்துள்ளனர்.

இருப்பினும் விஜய் படம் வெளியாகும் தியேட்டர்களில் திட்டமிட்டபடி பேனர்களை வைப்பதற்கு முடிவு செய்துள்ளோம் என்று விஜய் ரசிகர்கள் தெரிவித்து உள்ளனர்.

இதைத்தொடர்ந்து தியேட்டர்கள் முன்பு போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com