பிளஸ்-2 மாணவி-இளம்பெண் மாயம்

பிளஸ்-2 மாணவி-இளம்பெண் மாயமானார்.
மாயம்
மாயம்
Published on

திருமங்கலம்

மதுரை மாவட்டம் திருமங்கலம் அடுத்த கள்ளிக்குடி அருகே உள்ள சித்தாலி கிராமத்தைச் சேர்ந்த 17 வயதுடைய மாணவி திருமங்கலம் அரசு பெண்கள் மேல் நிலைப் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்தார்.

சம்பவத்தன்று பொதுத் தேர்வு எழுத சென்ற அவர் பின்னர் வீடு திரும்பவில்லை. பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்காததால் மாணவியின் தாய் கொடுத்த புகாரின் பேரில் திருமங்கலம் நகர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள நடுவக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் கள்ளந்தியான். இவருடைய மகள் மகாலட்சுமி(20). மகா லட்சுமி ஈரோடு மாவட்டம் திருச்செங்கோடு பகுதியில் தனியார் மில்லில் வேலை பார்த்து வந்து ள்ளார் 

இந்நிலையில் மகா லட்சுமியை திருச்செங்கோட்டிலிருந்து  அவரது தந்தை ஊருக்கு அழைத்து வந்துள்ளார். இதற்காக தந்தை-மகளும் பஸ்சுக்காக மதுரை மாவட்டம், திருமங்கலம் பஸ் நிலையத்தில் காத்திருந்தனர்.

அப்போது பாத்ரூம் செல்வதாக கூறிவிட்டு சென்ற மகாலட்சுமி வெகு நேரமாகியும் வரவில்லை. இதனால் பதட்டமடைந்த கள்ளந்தியான் மகளை பல்வேறு இடங்களில் தேடினார். பலனில்லை.

இதுகுறித்து திருமங்கலம் நகர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற் கொண்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com