search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பிளஸ் 2 துணைத்தேர்வு திட்டமிட்டபடி இன்று நடைபெறும்: தேர்வுத்துறை இயக்குனர் தகவல்
    X

    பிளஸ் 2 துணைத்தேர்வு திட்டமிட்டபடி இன்று நடைபெறும்: தேர்வுத்துறை இயக்குனர் தகவல்

    • ஐந்து மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை
    • 56,020 பேர் துணைத்தேர்வு எழுத இருக்கிறார்கள்

    தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவி வரும் மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. நேற்றிரவில் இருந்து தற்போது வரை மழை பெய்து வருகிறது. இன்று காலை 10 மணி வரை மழை நீடிக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    இதனால் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர் ஆகிய 6 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

    இதற்கிடையே இன்று பிளஸ் 2 துணைத்தேர்வு நடைபெறுவதாக இருந்தது. இந்தத் தேர்வை 56,020 மாணவர்கள் எழுத இருக்கிறார்கள். மழை பெய்து வருவதாலும், ஐந்து மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாலும் தேர்வு நடத்தப்படுமா? என்ற கேள்வி எழுந்தது.

    ஆனால், தேர்வு எக்காரணம் கொண்டும் ஒத்திவைக்கப்பட மாட்டாது. திட்டமிட்டபடி இன்று தேர்வு நடைபெறும் என தேர்வுத்துறை இயக்குனர் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×