என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
திருக்குறுங்குடி அருகே பிளஸ்-2 மாணவி மாயம்
- திருக்குறுங்குடி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுமி, அப்பகுதியில் உள்ள மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார்.
- 21-ந்தேதி காலையில் மாணவி பள்ளிக்கு செல்வதாக வீட்டில் கூறி விட்டு சென்றுள்ளார். ஆனால் அதன் பின் அவர் வீடு திரும்பவில்லை.
களக்காடு:
திருக்குறுங்குடி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுமி, அப்பகுதியில் உள்ள மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார். இவரது தந்தை வெளியூரில் உள்ள கடையில் தங்கி வேலை பார்த்து வருகிறார். தாயார் துப்புரவு தொழிலாளியாக உள்ளார். கடந்த
21-ந்தேதி காலையில் மாணவி பள்ளிக்கு செல்வதாக வீட்டில் கூறி விட்டு சென்றுள்ளார். ஆனால் அதன் பின் அவர் வீடு திரும்பவில்லை.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது தாயார் பல்வேறு இடங்களில் தேடியும் மாணவி குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதற்கிடையே வீட்டிற்கு வாட்ஸ்-ஆப் காலில் பேசிய மாணவி தான் திருப்பூரில் இருப்பதாக மட்டும் தெரிவித்துள்ளார். இதுபற்றி மாணவியின் தாயார் திருக்குறுங்குடி போலீசில் புகார் செய்தார். ஏர்வாடி இன்ஸ்பெக்டர் ஆதம் அலி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி மாயமான மாணவியை தேடி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்