search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பெரியநாயக்கன்பாளையம் அருகே பிளஸ்-1 மாணவர் தற்கொலை
    X

    பெரியநாயக்கன்பாளையம் அருகே பிளஸ்-1 மாணவர் தற்கொலை

    • காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • பாட்டியுடன் பேசிவிட்டு வீட்டில் உள்ள அறைக்கு சென்றார்.

    கோவை,

    கோவை பெரியநாயக்கன் பாளையம் அருகே உள்ள வண்ணான் கோவிலை சேர்ந்தவர் பிரதீப் இவரது மகன் அறிவரசு (வயது 16 ). இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தார் . நேற்று மாலை அறிவரசு வழக்கம் போல பள்ளிக்கு சென்று விட்டு வீட்டிற்கு வந்தார். பின்னர் அவர் சிறிது நேரம் தனது பாட்டியுடன் பேசிவிட்டு வீட்டில் உள்ள அறைக்கு சென்றார். நீண்ட நேரமாக அவர் வெளியே வராததால் சந்தேகம் அடைந்த உறவினர்கள் கதவைத் தட்டினர். ஆனால் யாரும் கதவை திறக்கவில்லை ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்தபோது அறிவுரசு தூக்கில் பிணமாக தூங்கினார்.

    இது குறித்து பெரியநாயக்கன்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து பள்ளிக்கு சென்று விட்டு வீட்டுக்கு திரும்பிய பிளஸ் 1 மாணவர் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×