search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மீண்டும் மஞ்சப்பை திட்டத்தால் குறையும் பிளாஸ்டிக் பயன்பாடு - அமைச்சர் மெய்யநாதன் பேட்டி
    X

    அமைச்சர் மெய்யநாதன்,மஞ்சப்பை திட்டம்(கோப்புபடம்)

    மீண்டும் மஞ்சப்பை திட்டத்தால் குறையும் பிளாஸ்டிக் பயன்பாடு - அமைச்சர் மெய்யநாதன் பேட்டி

    • பண்டிகை நாட்களில் பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரிப்பு வேதனை அளிக்கிறது.
    • திருவிழா உள்ளிட்ட பொது நிகழ்வுகளில் பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைக்க வேண்டும்.

    சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது;- தமிழகத்தில் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு அரசு தடை விதித்துள்ளது. மேலும் மீண்டும் மஞ்சப்பை என்ற திட்டத்தின் மூலம் மாநிலத்தில் பிளாஸ்டிக் பயன்பாடு குறைந்து வந்திருக்கிறது.

    எனினும் தீபாவளி போன்ற பண்டிகை நாட்களில் பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரிப்பு என்ற தகவல் மனதுக்கு வேதனையை அளிக்கிறது. எதிர்காலத்தில் திருவிழா உள்ளிட்ட பொது நிகழ்வுகளில் பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைக்க பொதுமக்கள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×