search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விழுப்புரத்தில்  பரிதாபம்: மின்வாரிய அதிகாரி விஷம் குடித்து தற்கொலை  காரணம் என்ன? போலீசார் விசாரணை
    X

    தற்கொலை செய்து கொண்ட சதீஷ்குமார்.

    விழுப்புரத்தில் பரிதாபம்: மின்வாரிய அதிகாரி விஷம் குடித்து தற்கொலை காரணம் என்ன? போலீசார் விசாரணை

    • விழுப்புரத்தில் மின்வாரிய அதிகாரி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதால் காரணம் என்ன? என்று போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
    • விழுப்புரம் கமலா கண்ணப்பன் நகரில் தங்கியிருந்து தினமும் திண்டிவனத்திற்கு பணிக்கு சென்று வந்தார்.

    விழுப்புரம்:

    தேனி மாவட்டம் கம்பம் பகுதியை சேர்ந்தவர் சதீஷ்குமார் (50). இவர் திண்டிவனத்தில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் செயற் பொறியாளராக பணியாற்றி வந்தார். இவர் விழுப்புரம் கமலா கண்ணப்பன் நகரில் தங்கியிருந்து தினமும் திண்டிவனத்திற்கு பணிக்கு சென்று வந்தார். நேற்று மாலை 7 மணியளவில் பணி முடிந்து சதீஷ்குமார் தனது வீட்டுக்கு சென்றார். பின்னர் சிறிது நேரத்தில் அவர் வாந்தி எடுத்துள்ளார். உடனே அவரிடம் ஏன் வாந்தி எடுக்கிறீர்கள் என்று அவரது மனைவி கேட்டுள்ளார். அதற்கு பணி முடிந்து வந்த போது எலிபேஸ்ட் உட்கொ ண்டதாக தெரிவித்தார்.

    அதிர்ச்சியடைந்த அவரது மனைவி அக்கம், பக்கத்தினரின் உதவியுடன் சதீஷ்குமாரை விழுப்புரத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தார். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக மதுரையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் செல்லும் வழியிலியே சதீஷ்குமார் இறந்தார். இதுகுறித்து விழுப்புரம் மேற்கு போலீசார் வழக்குபதிவு செய்து உள்ளனர். சதீஷ்குமார் உயர் அதிகாரியால் தற்கொலைசெய்தாரா? அதற்கான காரணம் என்ன? என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.

    Next Story
    ×