search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வணிகர்களுக்கு பாதுகாப்பு வழங்கிட வலியுறுத்தி தஞ்சை கலெக்டரிடம் மனு
    X

    தஞ்சை கலெக்டர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்தவர்கள்.

    வணிகர்களுக்கு பாதுகாப்பு வழங்கிட வலியுறுத்தி தஞ்சை கலெக்டரிடம் மனு

    • வணிகர்களை அச்சுறுத்தும் வகையில் பல்வேறு வகையில் தொல்லைகள் நடக்கிறது.
    • முக்கிய இடங்களில் கேமராக்கள் மற்றும் சம்மந்தப்பட்ட காவல் நிலைய போன் நம்பரை வைத்திருக்க வேண்டும்.

    வல்லம்:

    தஞ்சை மாவட்ட அனைத்து வணிகர் சங்க பேரமைப்பின் மாவட்ட தலைவர் சுப்பு என்கிற சுப்பிரமணியன் தலைமையில் வணிகர் சங்க நிர்வாகிகள் மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவரை சந்தித்து வணிகர்களுக்கு பாதுகாப்பு வழங்கிட கோரிக்கை மனு அளித்தனர்.

    பின்னர் இது பற்றி மாவட்ட தலைவர் சுப்பு என்கிற சுப்பிரமணியன் கூறியதாவது ;-

    ஜி.எஸ்.டி. வரி வருவதற்கு முன்னர் பொருட்கள் அனைத்தும் கடைகளுக்கு விற்பனைக்கு வந்தது.

    தற்போது பொருளாதார நெருக்கடியால் கடைகளே விற்பனையாகி வருகிறது. வணிகர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர்.

    இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு தற்போது தான் வணிகர்கள் மீண்டும் சற்று தலைதூக்கி வியாபாரம் செய்து வருகிறோம்.

    தற்போது வணிகர்களை அச்சுறுத்தும் வகையில் பல்வேறு வகையில் தொல்லைகள் வந்து கொண்டுள்ளது.

    கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் கூட தஞ்சை கரந்தை பகுதியில் சமூக விரோதிகளால் வணிகர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டார்.

    தற்போது சிலர் ஆயுதபூஜை அன்று பல இடங்களில் கடைகளுக்கு வந்து மிரட்டி மாமூல் கேட்டு வாங்கி சென்றுள்ளனர்.

    சில திருநங்கைகள் கடையில் வாசலில் நின்றும், கடைக்குள் வந்தும் அநாகரிகமாக நடந்து கொண்டனர். இதனால் வியாபாரம் பாதிக்கப்பட்டது.

    அதேபோல் சில சமூக விரோதிகளும் மிரட்டி பணம் கேட்டனர். தற்போது இன்னும் சில தினங்களில் தீபாவளி பண்டிகை வர உள்ளது.

    அதனை தொடர்ந்து பொங்கல் பண்டிகை வரவுள்ளது.

    தீபாவளி பண்டிகை நேரத்திலும் இவர்களால் மாமூல் தொல்லை ஏற்படும்.

    மாமூல் கேட்டு வணிகர்கள் மிரட்ட படும் அபாயம் உள்ளது.

    அது போன்ற சூழலில் வணிகர்களுக்கு பாதுகாப்பு வேண்டும்.

    இது தொடர்பாக கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டிடம் மனு அளித்துள்ளோம்.

    சங்கம் சார்பாகவும் தஞ்சை, பட்டுக்கோட்டை, உள்ளிட்ட அந்தந்த ஊர்களில் மாவட்ட நிர்வாகிகள் சார்பில் பொறுப்பாளர்களை நியமித்துள்ளோம்.

    வணிகர்கள் மிரட்டப்பட்டால் பொறுப்பாளர்களை தொடர்பு கொள்ள வேண்டும்.

    கடைகள் மற்றும் முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமராக்களை அமைக்க வேண்டும்.

    அதேபோல் அனைவரும் அந்தந்த சம்பந்தப்பட்ட காவல் நிலைய போன் நம்பரை வைத்திருக்க வேண்டும்.

    மாவட்ட நிர்வாகமும், மாநில அரசும் வணிகர்களின் கோரிக்கையை ஏற்று உதவிட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதில் மாவட்ட‌ செயலாளர் கோவிந்தராஜ், பொருளாளர் பாஸ்கரன், ஊடக தொடர்பாளர் இராம.சந்திரசேகரன், மாவட்ட இணை செயலாளர் முருகையன், மாவட்ட கூடுதல் செயலாளர் தாமரை செல்வன், தியாக சுந்தரமூர்த்தி, மணிகண்டன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

    Next Story
    ×