search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாவு பூச்சி தாக்குதலுக்கு மானியத்தில் பூச்சி மருந்து
    X

    மாவு பூச்சி தாக்குதலால் பாதிப்படைந்த மரவள்ளிக்கிழங்கு செடிகள்.

    மாவு பூச்சி தாக்குதலுக்கு மானியத்தில் பூச்சி மருந்து

    • விவசாயிகள் மர வள்ளிக் கிழங்கு குச்சிகள் பாதிப்படைந்த வயலில் இருந்து விதை கரணை தேர்வு செய்வதை தவிர்க்க வேண்டும்.
    • அனைத்து விவசாயிகளின் கூட்டு முயற்சி மாவுப்பூச்சி மேலாண்மைக்கு மிகவும் அவசிய மானதாகும்.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா கபிலர்மலை வட்டாரத்தில் தோட்டக்கலைத்துறை வெளியிட்டுள்ள கூறியிருப்பதாவது:-

    விவசாயிகள் மர வள்ளிக் கிழங்கு குச்சிகள் பாதிப்படைந்த வயலில் இருந்து விதை கரணை தேர்வு செய்வதை தவிர்க்க

    வேண்டும். முன்னெச்சரிக்கையாக, வேப்ப எண்ணெய் 2 சதவீதம் அல்லது அசாடிராக்டின் 1500 (5 மி.லி/ லிட்டர் தண்ணீருக்கு) மற்றும் 1 மி.லி. டீப்பால் ஒட்டும் திரவம் 1 லிட்டர் தண்ணீருடன் கலந்து கைத்தெளிப்பான் கொண்டு செடியின் அடிப்பாகம் வரை நன்கு நனையும் படி தெளிக்க வேண்டும். இதனால் மாவுப்பூச்சிகள் தாக்குதலை தடுக்கலாம்.

    தையோமீத்தாக்சிம் பூச்சிக் கொல்லி 1 லிட்டர் தண்ணீருக்கு 0.5 கிராம் அளவில் கலந்து கைத் தெளிப்பான் கொண்டு செடியின் அடிப்பாகம் நன்கு நனையும்படி தெளித்து மாவுப்பூச்சி தாக்கு தலை தடுக்கலாம். மருந்து தெளிக்கும்போது பாதிக்கப்பட்ட செடியின் நுனிப்பகுதியை மாவுப்பூச்சி

    யுடன் சேர்த்து அப்புறப்ப டுத்தி எரிக்க வேண்டும்.

    அனைத்து விவசாயிகளின் கூட்டு முயற்சி மாவுப்பூச்சி மேலாண்மைக்கு மிகவும் அவசிய மானதாகும். விவ

    சாயிகள் ஒருங்கிணைந்த முறைகளில் மாவுப்பூச்சி களை கட்டுப்படுத்த வேண்டும். நமது பகுதியில் மரவள்ளி நடவு பருவம் என்பதால் அனைவரும் தவறாமல் கடைபிடிக்க வேண்டும்.

    மேற்கண்ட மருந்துகள் கபிலர்மலை வட்டார தோட்டக்கலை துறை சார்பில் மானியம் மூலம் வழங்கப்படுகிறது. மானிய விலையில் மருந்துகள் தேவைப்படும் விவசாயிகள் சிட்டா,ஆதார் நகல், ரேசன் கார்டு நகல்,புகைப்படம் ஆகியவற்றை கபிலர்மலை வட்டார தோட்டக்கலை துறை அலுவலகத்திற்கு கொண்டு வந்து கொடுத்து பெற்றுக் கொள்ளலாம்.

    Next Story
    ×