search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    போலியான தகவல்களை பரப்பும் இ-சேவை மையங்களின் அனுமதி ரத்து செய்யப்படும்-கலெக்டர் எச்சரிக்கை
    X

    போலியான தகவல்களை பரப்பும் இ-சேவை மையங்களின் அனுமதி ரத்து செய்யப்படும்-கலெக்டர் எச்சரிக்கை

    • சாதி சான்றிதழை புகைப்படத்துடன் கூடிய சான்றிதழாக வருகிற 16-ந்தேதிக்குள் மாற்றி கொள்ள வேண்டும் என்று தகவல் பரவி வருகிறது.
    • போலியான தகவல்களை பரப்பும் இ-சேவை மையங்களின் அனுமதி ரத்து செய்யப்படும் என்று எச்சரிக்கப்படுகிறது.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்ட கலெக்டர் சாந்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    தமிழ்நாடு அரசின் சின்னத்துடன் வாட்ஸ்-அப்பில் அரசின் புதிய ஆணைப்படி பழைய மற்றும் புகைப்படம் இல்லாமல் இருக்கும் சாதி சான்றிதழை புகைப்படத்துடன் கூடிய சான்றிதழாக வருகிற 16-ந்தேதிக்குள் மாற்றி கொள்ள வேண்டும் என்று தகவல் பரவி வருகிறது.

    இதுபோன்ற எந்த உத்தரவையும் அரசு பிறப்பிக்கவில்லை. இதுபோன்ற போலியான தகவல்களை பரப்பும் இ-சேவை மையங்களின் அனுமதி ரத்து செய்யப்படும் என்று எச்சரிக்கப்படுகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×