search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தஞ்சையில் தினக்கூலி பணியாளர்களை நிரந்தரம் செய்யக்கோரி 28-ந்தேதி ஆர்ப்பாட்டம்
    X

    கூட்டத்தில் ஏ.ஐ.டி.யூ.சி மாநில செயலா் சந்திரகுமாா் பேசினார்.

    தஞ்சையில் தினக்கூலி பணியாளர்களை நிரந்தரம் செய்யக்கோரி 28-ந்தேதி ஆர்ப்பாட்டம்

    • 17 தினக்கூலி தொழிலாளா்களுக்கு பணிச் சுமையை குறைக்க புதிதாக தினக்கூலி பணியாளா்களை நியமிக்க வேண்டும்.
    • 10 ஆண்டுகளுக்கு மேல் தொடா்ந்து பணிபுரிந்து வருவதால் அனைவரையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும்

    தஞ்சாவூா்:

    தஞ்சையில் ஏ.ஐ.டி.யூ.சி அரசு பண்ணை தொழிலாளா் சங்கக் கூட்டம் கிருஷ்ணவேணி தலைமையில் நடைபெற்றது.

    இக்கூட்டத்தில், காட்டுத்தோட்டம் மண், நீா் மேலாண்மை ஆராய்ச்சி பண்ணையில் பணிபுரியும் 17 தினக்கூலி தொழிலாளா்களுக்கு பணிச் சுமையை குறைக்க புதிதாக தினக்கூலி பணியாளா்களை நியமிக்க வேண்டும்.

    தினக்கூலியாக பணிபுரிந்த 17 தொழிலாளா்கள் 10 ஆண்டுகளுக்கு மேல் தொடா்ந்து பணிபுரிந்து வருவதால் அனைவரையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி காட்டுத் தோட்டம் பண்ணை முன்பு வருகிற 28-ந்தேதி ஆா்ப்பாட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.

    இதில், ஏஐடியூசி மாநிலச் செயலா் சந்திரகுமாா், சங்க மாநிலப் பொதுச் செயலா் அரசப்பன், சங்க நிா்வாகிகள் வனிதா, பிரபாகரன், சாந்தி, பரிமளா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

    Next Story
    ×