search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விழிப்புணர்வு பிரசார நிகழ்ச்சி
    X

    விழிப்புணர்வு பிரசார நிகழ்ச்சி

    பெரம்பலூரில் விழிப்புணர்வு பிரசார நிகழ்ச்சி

    பெரம்பலூர்

    பெரம்பலூர் புதுபஸ் நிலைய வளாகத்தில் குழந்தை திருமணங்களே இல்லாத இந்தியா விழிப்புணர்வு பிரசாரம் நடைபெற்றது. இந்தோ டிரஸ்ட் நிர்வாக இயக்குநர் முகமது உசேன் தலைமை வகித்து பிரச்சாரத்தை தொடங்கி வைத்தார்.

    பெரம்பலூர் புதுபஸ்ஸ்டாண்ட், பழைய பஸ்ஸ்டாண்ட், கிருஷ்ணா தியேட்டர், மகளிர் கலைக்கல்லூரி, மருத்துவமனை, பள்ளி வளாகங்களில் இந்த விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு துண்டுபிரசுரங்களை விநியோகம் செய்தனர்.

    இந்தோ டிரஸ்ட் சார்பில் குழந்தை திருமணங்களே இல்லா இந்தியா என்ற தலைப்பில் பெரம்பலூர் மாவட்டத்தில் நகரம், கிராமங்கள், மக்கள் அதிகம் கூடும் இடங்கள் என 50 இடங்களில் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் டிரஸ்ட் பணியாளர்கள், சமூக ஆர்வலர்கள் கலந்துகொண்ட பிரச்சாரம் செய்தனர். முடிவில் மேலாளர் செல்வக்குமார் நன்றி கூறினார்.

    Next Story
    ×