என் மலர்
உள்ளூர் செய்திகள்

பெண்களை பஸ்சில் ஏற்ற மறுப்பு
- பெண்களை பஸ்சில் ஏற்ற மறுப்பு தெரிவிக்கின்றனர்.
- இதுகுறித்து சம்பந்தப்பட்ட போக்குவரத்துத்துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெண்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பெரம்பலூர்
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் மேற்கு ஒன்றியம் பழைய விராலிப்பட்டி கிராமத்தில் இருந்து நூறுநாள் வேலை செய்யும் பெண்கள் புது விராலிப்பட்டி குப்புசாமி கோவில் வரை கிட்டத்தட்ட 3 கிலோ மீட்டர் தூரம் நடந்து செல்ல வேண்டி உள்ளது. இந்த நிலையில் அவர்கள் அரசு பஸ்சில் ஏறி பயணம் செய்ய வேண்டும் என்றால், அரசு பஸ் டிரைவர்கள் மற்றும் கண்டக்டர்கள் பெண்களை பஸ்சில் ஏற்ற மறுக்கின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட போக்குவரத்துத்துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெண்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story






