search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவில் நிலங்கள் மீட்பு
    X

    கோவில் நிலங்கள் மீட்பு

    • ரூ.60 லட்சம் மதிப்பிலான 3 ஏக்கர் கோவில் நிலம் மீட்கப்பட்டுள்ளது
    • அறநிலையத்துறையினர் அதிரடி

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் மாவட்டம் மேலமடம் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு சொந்தமான பெரம்பலூர்-அரியலூர் தேசிய நெடுஞ்சாலையில் பேரளியில் 3 ஏக்கர் நிலம் விவசாயி ஒருவரால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்தது. இது தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறையின் திருச்சி இணை ஆணையர் செல்வராஜ், பெரம்பலூர் உதவி ஆணையர் லட்சுமணன் ஆகியோருக்கு பல்வேறு புகார்கள் வந்த வண்ணம் இருந்தன. இதையடுத்து அவர்களது உத்தரவின் பேரில், இந்து சமய அறநிலையத்துறை பெரம்பலூர் தனி தாசில்தார் (கோவில் நிலங்கள்) பிரகாசம் முன்னிலையில் கோவில் செயல் அலுவலர் கோவிந்தராஜன், குன்னம் ஆய்வாளர் சுசிலா, பேரளி (வடக்கு) கிராம நிர்வாக அலுவலர் சக்திவேல், நில அளவையாளர் கண்ணதாசன் மற்றும் பேரளி கிராம பொதுமக்கள் ஒத்துழைப்புடன் ரூ.60 லட்சம் மதிப்பிலான மேற்கண்ட கோவில் நிலம் ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து மீட்கப்பட்டது. மேலும் மேலமடம் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு சொந்தமாக பேரளியில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள 60 ஏக்கர் நிலம் கண்டறியப்பட்டுள்ளது. அந்த நிலமும் விரைவில் மீட்கப்படும் என்று இந்து சமய அறநிலையத்துறையினர் தெரிவித்தனர். பெரம்பலூர் மாவட்டத்தில் இந்து சமய அறநிலையத்துறைக்குட்பட்ட கோவில்களின் நிலங்களை யாரேனும் ஆக்கிரமிப்பு செய்தால், அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் எச்சரித்தனர்.

    Next Story
    ×