search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வக்கீல்கள் கோர்ட்டு பணிகளை புறக்கணிப்பு
    X

    வக்கீல்கள் கோர்ட்டு பணிகளை புறக்கணிப்பு

    • வக்கீல்கள் கோர்ட்டு பணிகளை புறக்கணித்தனர்.
    • கோரிக்கை நிறைவேறும் வரை நடைபெறும்

    பெரம்பலூர்

    பெரம்பலூர் கோர்ட்டில் தாக்கல் செய்யும் அனைத்து மனுக்களும், வழக்கு ஆவணங்களும் ஆன்லைனில் இ-பைலிங் தாக்கல் செய்ய கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது. இது உடனடியாக செயல்பாட்டுக்கு வருவது மிக கடினமாக இருப்பதால் வக்கீல்களின் நலன் கருதியும், நீதிமன்ற பணிகள் பாதிக்காமல் இருப்பதற்காகவும் இ-பைலிங் உடனடியாக கட்டாயப்படுத்துவதை தற்காலிகமாக நிறுத்தி வைத்திட வேண்டும் என்றும், இ-பைலிங் தாக்கல் முறையை தற்காலிகமாக நிறுத்தும் வரை பெரம்பலூர் பார் அசோசியேஷன் (குற்றவியல்) தலைவர் வள்ளுவன் நம்பி தலைமையிலும் வக்கீல்களும், பெரம்பலூர் அட்வகேட் அசோசியேஷன் தலைவர் மணிவண்ணன் தலைமையிலும் வக்கீல்களும் நேற்று முதல் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள கோர்ட்டுகளில் பணிகளை புறக்கணிக்க தொடங்கினர். இதனால் கோர்ட்டு பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டன. கோரிக்கை நிறைவேறும் வரை 2 அசோசியேஷனை சேர்ந்த வக்கீல்கள் தொடர்ந்து கோர்ட்டு பணிகளை புறக்கணிக்க முடிவு செய்துள்ளனர்.

    Next Story
    ×