search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கபடி போட்டியில் அரசு பள்ளிகள் முதலிடம்
    X

    கபடி போட்டியில் அரசு பள்ளிகள் முதலிடம்

    • கபடி போட்டியில் அரசு பள்ளிகள் முதலிடம் பிடித்தது.
    • மாவட்ட விளையாட்டு அரங்கில் நேற்று நடந்தது.

    பெரம்பலூர்

    பெரம்பலூர் மாவட்ட பள்ளிக்கல்வித்துறை சார்பில் குடியரசு தின விழாவையொட்டி நடந்த பெரம்பலூர் குறுவட்ட அளவிலான பள்ளி மாணவர்களுக்கான விளையாட்டு போட்டிகளில் மழையின் காரணமாக ஒத்தி வைக்கப்பட்டிருந்த கபடி, கோ-கோ, கால்பந்து ஆகிய குழு போட்டிகள் மாவட்ட விளையாட்டு அரங்கில் நேற்று நடந்தது. இதில் 14 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கான கபடி போட்டியில் பூலாம்பாடி அரசு மேல்நிலைப்பள்ளி முதலிடமும், 19 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கான கபடி போட்டியில் அம்மாபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி முதலிடமும் பிடித்தது. 14, 19 ஆகிய வயதுகளுக்குட்பட்ட மாணவர்களுக்கான கோ-கோ போட்டியில் எறையூர் அரசு நிதியுதவி பெறும் நேரு மேல்நிலைப்பள்ளி முதலிடம் பிடித்தது. 14 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கான கால்பந்து போட்டியில் பெரம்பலூர் மரகத மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதலிடமும், 19 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கான கால்பந்து போட்டியில் தனலட்சுமி சீனிவாசன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதலிடமும் பிடித்தன.

    Next Story
    ×