search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் காலி பதவியிடங்களுக்கான வேட்பு மனு தாக்கல்
    X

    ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் காலி பதவியிடங்களுக்கான வேட்பு மனு தாக்கல்

    • காலியாக உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் காலி பதவியிடங்களுக்கான வேட்பு நடைபெறுகிறது என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.
    • மனு தாக்கல் இன்று தொடங்குகிறது

    பெரம்பலூர் :

    மாவட்ட கலெக்டர்கள் ஸ்ரீவெங்கடபிரியா (பெரம்பலூர்) கவிதா ராமு (புதுக்கோட்டை) ஆகியோர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது :

    பெரம்பலூர் மாவட்ட த்தில் பெரம்பலூர் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட மேலப்புலியூர் ஊராட்சி மன்ற தலைவர், ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியம் இரூர் கிராம ஊராட்சி 1- வது வார்டு, பிலிமிசை கிராம ஊராட்சி 4-வது வார்டு, வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றியம் வி.களத்தூர் கிராம ஊராட்சி 7-வது வார்டு, வேப்பூர் ஊராட்சி ஒன்றியம் கீழப்புலியூர் கிராம ஊராட்சி 8-வது வார்டு ஆகிய உறுப்பினர் பதவியிடங்கள் காலியாக உள்ளன.

    இதே போல புதுக்கோட்டை மாவட்டத்தில் 7-வது வார்டு மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர், அன்னவாசல் ஒன்றியம் வெட்டுக்காடு, அறந்தாங்கி மேலப்பட்டு, அரிமளம் நெடுங்குடி, குன்றாண்டார் கோவில் தென்னங்குடி, புதுக்கோட்டை ெதாண்டைமான் ஊரணி ஆகிய 5 ஊராட்சி மன்றத் தலைவர் பதவியிடங்கள், 22 ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவியிடங்கள் என மொத்தம் 28 பதவியிடங்கள் காலியாக உள்ளன.

    இந்த பதவியிடங்களுக்கு இன்று தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டு வேட்பு மனுக்கள் பெறும் பணி தொடங்கும். வருகிற 27-ந்தேதி வேட்புமனுக்கல் தாககல் செய்ய இறுதி நாள்.

    தொடர்ந்து வருகிற 28-ந்தேதி காலை 10 மணிக்கு வேட்பு மனுக்கள் பரிசீலனை செய்யப்படும். வருகிற 30-ந்தேதி பிற்பகல் 3 மணி வரை வேட்பு மனுக்களை திரும்ப பெறலாம்.

    பின்னர் ஜூலை 9-ந்தேதி காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். ஜூலை 12-ந்தேதி காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கும். ஜூலை 14-ந்தேதி தேர்தல் நடைமுறைகள் முடிவு பெறும்.

    தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தால் தெரிவிக்கப்பட்டுள்ள அனைத்து வழிமுறைகளையும் பின்பற்றி இந்த ஊரக உள்ளாட்சி அமைப்பு காலி பதவியிடங்களுக்கு தேர்தல் நடத்தப்படும்.

    Next Story
    ×