search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆட்டோ சங்கத்தினர் தர்ணா பேராட்டம்
    X

    ஆட்டோ சங்கத்தினர் தர்ணா பேராட்டம்

    • ஆட்டோ சங்கத்தினர் தர்ணா பேராட்டம் நடந்தது
    • கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் காந்தி சிலை முன்பு சி.ஐ.டி.யூ. 3 பிளஸ்1 ஆட்டோ மற்றும் அனைத்து வகையான வாகன டிரைவர்கள் தொழிலாளர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி தர்ணா போராட்டம் நடந்தது.

    போராட்டத்திற்கு ஆட்டோ சங்க மாவட்ட தலைவர் கிருஷ்ணகுமார் தலைமை வகித்தார். ஆட்டோ சங்க நிர்வாகிகள் மாவட்ட செயலாளர் ரெங்கநாதன், துணை தலைவர் பெரியசாமி, பொருளாளர் இன்பராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    சி.ஐ.டி.யூ. மாவட்ட செயலாளர் அகஸ்டின், மார்க்சிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் ரமேஷ் ஆகியோர் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி பேசினர்.

    இதில் கடுமையாக உயர்த்தப்பட்ட போக்குவரத்து அபராத கட்டணத்தை திரும்ப பெற வேண்டும், ஆன்லைன் அபராதத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து கைவிட வேண்டும், வீடு இல்லாத ஆட்டோ தொழிலாளர்கள் குடும்பத்திற்கு வீட்டு வசதி வாரியத்தின் மூலம் வீடு வழங்கவேண்டும், மத்திய அரசின் மோட்டார் வாகன திருத்த சட்டத்தை திரும்பபெறவேண்டும், 15 ஆண்டுகால ஆட்டோக்கள் காலாவதியானால் அரசே வங்கி மூலம் கடன் வழங்க வேண்டும் போன்ற கோரிக்களை நிறைவேற்ற வலியுறுத்தி கோஷமிட்டனர்.

    சி.ஐ.டி.யூ. மாவட்ட செயலாளர் ரெங்கராஜ், மாவட்ட துணை செயலாளர்கள் சிவானந்தம், ஆறுமுகம், பொன்ராஜ், மாவட்ட துணை தலைவர் கருணாநிதி உட்பட ஆட்டோ தொழிற்சங்கத்தினர் பலர் கலந்துகொண்டனர்.

    Next Story
    ×