search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மின்சாரம் பாய்ந்து பசுமாடு பலி
    X

    மின்சாரம் பாய்ந்து பசுமாடு பலி

    • மின்சாரம் பாய்ந்து பசுமாடு பலியானது.
    • வயலில் மேய்ந்து கொண்டிருந்தது

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா நாரணமங்கலம் கிராமத்தை அடுத்துள்ள விஜயகோபாலபுரம் கிராமத்தை சேர்ந்தவர் குணசேகரன். இவருக்கு சொந்தமான பசுமாடு அங்குள்ள வயலில் மேய்ந்து கொண்டிருந்தது. அப்போது உயர் மின்னழுத்த கம்பத்தில் இருந்த கம்பிகள் காற்றினால் ஏற்பட்ட உராய்வின் காரணமாக அறுந்து பசு மாட்டின் மீது விழுந்தது. இதில் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே பசுமாடு பலியானது. இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் நாராயணசாமி, வருவாய் ஆய்வாளர் ரங்கநாதன் ஆகியோர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×