ஜீரோ பேலன்ஸில் வங்கி கணக்கு தொடங்க ஏற்பாடு

மகளிர் உரிமை தொகை பெற ஜீரோ பேலன்ஸில் கூட்டுறவு வங்கிகளில் கணக்குகள் தொடங்கலாம் பெரம்பலூர் மாவட்டத்தில் சிறப்பு ஏற்பாடு
ஜீரோ பேலன்ஸில் வங்கி கணக்கு தொடங்க ஏற்பாடு
Published on

பெரம்பலூர்,

தமிழகத்தில் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தின் கீழ் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ. 1000 உரிமைத் தொகை வழங்கப்பட உள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் பதிவு செய்யும் முகாம்கள் வருகிற 24-ம் தேதி தொடங்குகிறது.இந்த திட்டத்தில் பயன்பெற ஒவ்வொரு குடும்பத்திலும் ரேஷன் கார்டில் பெயர் உள்ளவர்களில் 21 வயது நிரம்பிய பெண் ஒருவர் விண்ணப்பிக்க முடியும். இந்த உரிமை தொகை பெறுவதற்கான தகுதிகளை ஏற்கனவே தமிழக அரசு வெளியிட்டுள்ளது.மேற்கண்ட திட்டத்தில் விண்ணப்பிக்க வீடு தேடி கொடு க்கப்படும் விண்ணப்ப படிவங்களை பூர்த்தி செய்து முகாம் நடக்கும் நாட்களில் கொண்டு சென்று கொடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதற்கிடையே வங்கி கணக்கு இல்லாதவர்கள் சேமிப்பு கணக்கு தொடங்க வங்கிகளை நாடி செல்கின்றனர். தற்போது வங்கிகளில் சேமிப்பு கணக்கு தொடங்க வேண்டும் என்றால் குறைந்தபட்ச இருப்பு தொகை செலுத்த வேண்டிய நிலை உள்ளது. இதனால் ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் மத்திய கூட்டுறவு வங்கிகளில் குறைந்தபட்ச இருப்புத் தொகை எதுவும் இல்லாமல் ஜீரோ பேலன்ஸ் என்று அடிப்படையில் சேமிப்பு கணக்குகள் தொடங்கப்பட்டு வருகின்றன. பெரம்பலூர் மாவட்டத்தில் பெரம்பலூர், அரும்பாவூர், செட்டிகுளம், குன்னம், இலப்பை குடிக்காடு, பாடலூர், துறைமங்கலம்,வி. களத்தூர்,வாலி கண்டபுரம், வேப்பந்தட்டை ஆகிய 10 இடங்களில் உள்ள திருச்சிராப்பள்ளி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி கிளைகளில் இந்த சேமிப்பு கணக்குகள் தொடங்கும் பணிகள் தொ டங்கப்பட்டுள்ளன.இந்த சேமிப்பு கணக்கு தொடங்குவதற்கு 3 பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள், ஆதார் அட்டை, ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை ஆகியவற்றின் நகல் மற்றும் அசல் ஆகியவற்றை எடுத்துச் செல்ல வேண்டும். இந்த தகவலை கூட்டுற வுத்துறை அதி காரிகள் தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com