search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை
    X

    தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை

    • தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
    • திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டம், லாடபுரம் கிராமத்தை சேர்ந்தவர் கலியன் என்ற கலியபெருமாள். இவரது மகன் ஒன்றரை இட்லி என்ற மணிகண்டன்(வயது 26). கட்டிட தொழிலாளி. இவர் கடந்த 4.1.2020 அன்று விளையாடி கொண்டிருந்த 6 வயதுடைய 1-ம் வகுப்பு படித்த சிறுமியை தனது வீட்டிற்கு அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்தார். இது தொடர்பாக சிறுமியின் தாய் பெரம்பலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து மணிகண்டனை கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். மேலும் அவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. இந்த சம்பவம் தொடர்பான வழக்கு பெரம்பலூரில் உள்ள மாவட்ட மகிளா கோர்ட்டில் நடந்து வந்தது.

    இந்த வழக்கு விசாரணை நிறைவடைந்தது. இதையடுத்து மகிளா கோர்ட்டு அமர்வு நீதிபதி முத்துகுமரவேல் தீர்ப்பு கூறினார். அவர் தனது தீர்ப்பில், சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த மணிகண்டனுக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், ரூ.1 லட்சம் அபராதமும், அபராத தொகையை கட்ட தவறினால் மேலும் ஒரு ஆண்டு சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு ரூ.6 லட்சம் இழப்பீட்டு தொகை வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார். இதையடுத்து மணிகண்டனை போலீசார் பலத்த பாதுகாப்புடன் திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

    Next Story
    ×