search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சேலம் தலைமை அஞ்சலக கட்டிடத்தில் வருகிற   29-ந்தேதி மக்கள் குறை தீர்க்கும் நாள்
    X

    சேலம் தலைமை அஞ்சலக கட்டிடத்தில் வருகிற 29-ந்தேதி மக்கள் குறை தீர்க்கும் நாள்

    சேலம் தலைமை அஞ்சலக கட்டிடத்தில் வருகிற 29-ந்தேதி மக்கள் குறை தீர்க்கும் நாள் நடைபெறும்.

    சேலம்:

    சேலம் தலைமை அஞ்சலக கட்டிடம் கிழக்கு கோட்ட முதுநிலை கண்காணிப்பாளர் அலுவலக 3-வது தளத்தில் வருகிற 29-ந்தேதி காலை 11 மணியளவில் மக்கள் குறை தீர்க்கும் முகாம் நடைபெற உள்ளது. இதில் பொதுமக்கள் அஞ்சல் சம்பந்தமாக ஏதேனும் குறைகள் இருப்பின் புகார்களை தெரிவிக்கலாம்.

    மணி ஆர்டர், வி.பி.பி., வி.பி.எல்., பதிவு தபால், விரைவு தபால், காப்பீடு தபால் பற்றிய புகார்கள் எனில் அனுப்பிய தேதி, முழு முகவரி, பதிவு அஞ்சல் எண், அலுவலகத்தின் பெயர் அனைத்தும் இடம்பெற்றிருக்க வேண்டும். சேமிப்பு வங்கி அல்லது அஞ்சல் காப்பீடு பற்றிய புகார்கள் என்றால் கணக்கு எண், பாலிசி எண், வைப்புத் தொகையாளரின் பெயர், வசூலிக்கப்பட்ட விபரங்கள் அல்லது வேறு ஏதேனும் குறிப்புகள் இருந்தால் தெரிவிக்கவும்.

    தபால் மூலம் குறைகளை தெரிவிக்க விரும்புபவர்கள் அஞ்சல் உறையின் மேலே DAK ADALAT CASE என்று எழுதவும்.

    மேலும் வருகிற 27-ந்தேதிக்குள் மேற்கண்ட அலுவலகத்தில் கிடைக்குமாறு அந்த தபாலை அனுப்பி வைக்க வேண்டும். இந்த தகவலை சேலம் கிழக்கு கோட்ட அஞ்சல் முதுநிலை கண்காணிப்பாளர் அருணாச்சலம் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×