search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தேனி அருகே நோய் கொடுமையால் 3 பேர் தற்கொலை
    X

    கோப்பு படம்.

    தேனி அருகே நோய் கொடுமையால் 3 பேர் தற்கொலை

    நோயால் அவதிப்பட்டு வந்த நிலையில் தற்கொலை செய்துகொண்டனர்.

    தேனி:

    தேனி மாவட்டம் கம்பம் 1-வது வார்டு பகுதியை சேர்ந்தவர் மாசாணம்(77). இவரது மனைவி ராசாத்தி. கடந்த சில மாதங்களுக்கு முன்பு தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். அப்போது முதல் மாசாணமும் உடல்நிலை பாதிக்கப்பட்டு நடக்க முடியாமல் இருந்து வந்தார். இதனால் வாழ்க்கையில் வெறுப்படை ந்த அவர் தனது வீட்டிலேயே தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    வருசநாடு அம்பேத்கார் நகரை சேர்ந்தவர் மாரிமுத்து(47). இவருக்கு கடந்த 2 வருடமாக சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு வலது காலில் உள்ள 2-வது விரலை வெட்டி எடுத்து விட்டனர். இதனால் வேலைக்கு செல்ல முடியாமல் கஷ்டப்பட்டு வந்தார். சம்பவத்தன்று தனது வீட்டிலேயே தூக்குபோட்டு தற்ெகாலை செய்து கொண்டார்.

    பெரியகுளம் கீழவட கரையை சேர்ந்த ஜெயபாண்டியன் மனைவி லிபியாரோஸ்(35). இவர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். நோய் குணமாகாததால் பெரிய குளம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தார்.

    போடி நாகலாபுரத்தை சேர்ந்தவர் குருவய்யா(58). இவர் வயிற்றுவலி காரணமாக பூச்சிமருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

    Next Story
    ×