வாணியம்பாடி அருகே அம்பேத்கர் உருவப்படம் அவமதிப்பு- பொதுமக்கள் சாலை மறியல்

குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி திடீரென சாலைமறியலில் ஈட்டுபட்டனர்.வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவிற்கு அணிவகுத்து நின்றன.
வாணியம்பாடி அருகே அம்பேத்கர் உருவப்படம் அவமதிப்பு- பொதுமக்கள் சாலை மறியல்
Published on

வாணியம்பாடி:

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த நெக்குந்தி ஆதிதிராவிடர் பகுதியில் பெயர் பலகையில் அம்பேத்கர் உருவபடம் வரையப்பட்டுள்ளது.

இதில் அம்பேத்கரை அவமதிக்கும் வகையில், படம் பெயர் பலகை மீது மர்மநபர்கள் மாட்டு சாணத்தை வீசி அவமதித்து உள்ளனர். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அந்த பகுதி மக்கள் உடனடியாக தேசிய நெடுஞ்சாலையில் ஒன்று திரண்டனர். குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி திடீரென சாலைமறியலில் ஈட்டுபட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்த டவுன் போலீசார், விரைந்து சென்று பொதுமக்களிடம் பேச்சுவர்த்தை நடத்தினர்.

இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். இதனைத் தொடர்ந்து அனைவரும் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இதனால் அந்த பகுதியில் வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவிற்கு அணிவகுத்து நின்றன. போக்குவரத்து கடுமையாக பாதித்தது. போலீசார் போக்குவரத்து சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

X

Maalai Malar
www.maalaimalar.com