என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
அடிப்படை வசதிகள் கிடைக்காமல் தவிக்கும் கம்மம்பட்டி ஊராட்சி கிராம மக்கள்
- 8 கிலோமீட்டர் நீளம் கொண்ட சாலை கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் போடப்பட்டது.
- மோசமான சாலையின் காரணமாக ஆம்புலன்ஸ் வருவதில்லை.
தொப்பூர்,
தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி ஒன்றியம் கம்மம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட மலையூர் காடு, மூலக்காடு, மணியக்காரனுர், செங்காங்காடு உள்ளிட்ட 5 கிராமப் பகுதியில் சுமார் 2000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.
இங்கிருந்து தினமும் பணிக்கு செல்வோர் மற்றும் கூலி வேலைக்கு செல்வோர், பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள் தருமபுரி மாவட்டத்தில் இருந்து நேரடி போக்குவரத்து வசதி இல்லாததால் சேலம் மாவட்டத்தில் இருந்து வரும் பேருந்து வசதிகளையும் நம்பி இருந்தனர்.
இந்த கிராமங்களுக்கு செல்லும் முக்கிய சாலையாக சுமார் 8 கிலோமீட்டர் நீளம் கொண்ட சாலை கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் போடப்பட்டது. 5 ஆண்டுகளாகவே உடைந்து சேதமாகி தற்போது தரமற்ற சாலையாக மாறிவிட்டது.
இந்நிலையில் கடந்த 4 மாதங்களாக சாலை மிகவும் மோசமாக இருப்பதால் பேருந்துகள் செல்ல முடியாததால் தகுதியற்ற சாலையாக மாறிவிட்டதாக கூறி சேலம் மாவட்டத்தில் இருந்து இயக்கபட்ட அரசு பேருந்துகள் மலையூர் காடு பகுதிக்கு வராமல் சோழியானூர் பகுதியோடு திரும்பி சென்று விடுகிறது.
காலை, மாலை நேரங்களில் மட்டும் பள்ளி மாணவர்களுக்காக ஒரே ஒரு பேருந்து மட்டும் வந்து செல்வதாகவும் மற்ற நேரங்களில் பேருந்து வசதி முற்றிலும் இல்லாமல் போய்விட்டது என்றும் பொதுமக்கள் தெரிவித்தனர்.
இது குறித்து சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் கொடுத்தும், இதுவரை எந்த வித ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.
மேலும் பழுதடைந்து அதிக அளவு பள்ளங்களாக மாறிய சாலையை மண் உள்ளிட்ட வற்றை கொட்டி மண் சாலையாக மாற்றி வருகின்றனர். இதனால் கிராம மக்கள் அனைவரும் வேறு வழியின்றி நடந்தே செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
மேலும் மருத்துவ வசதிகள் மற்றும் பிரசவத்திற்கு ஆம்புலன்ஸ் மற்றும் சரக்கு வாகனங்கள் மோசமான சாலையின் காரணமாக வருவதில்லை.
இது குறித்து மூலகாடு பகுதியை சேர்ந்த பட்டதாரி இளம் பெண் கிருஷ்ணவேணி கூறும்போது அடிப்படை வசதிகள் எங்கள் கிராமத்திற்கு கிடைக்காமல் தவித்துக் கொண்டிருந்த நிலையில் தற்பொழுது பேருந்து வசதிகளும் கிடைக்காததால் மிகவும் சிரமப்படுகிறோம்.
அவசர உதவிக்கு மகப்பேறு சிகிச்சை மற்றும் பிரசவத்திற்கு ஆம்புலன்ஸ் உதவியை நாடினால் கூட எளிதில் இப்பகுதிக்கு வருவதில்லை. தனி நபர்களின் வாகனங்கள் அல்லது வாடகை வாகனங்களை அழைத்தாலும் கரடு முரடான சாலையால் எங்கள் பகுதிக்கு வருவதற்கு தயங்குகின்றனர்.
இதனால் சரியான நேரத்தில் சிகிச்சைக்கு செல்ல முடியாமல் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றோம். பள்ளி மற்றும் கல்லூரி பயில்வதற்கு பேருந்து வசதிக்கும் சேலம் மாவட்டத்தை நம்பி இருக்கின்றோம். தருமபுரி மாவட்டத்திலிருந்து நேரடி சாலை வசதியோ, பேருந்து வசதியோ, அதிகாரிகள் ஏற்படுத்திக் கொடுக்கவில்லை. இதற்கு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ெதரிவித்தார்.
மேலும் குடிநீர் தேவை அடிப்படை வசதிகள் உள்ளிட்ட அனைத்திற்கும் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். ஆகையால் எங்கள் கிராமத்தை சேலம் மாவட்டத்தோடு சேர்த்து விடுங்கள் என வேதனையுடன் கம்மம்பட்டி ஊராட்சி பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்