கே.டி.சி.நகரில் மின் பொறியாளர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் - புகார்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க உத்தரவு

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் சார்பாக நெல்லை மின் பகிர்மான வட்டம் நகர்புற கோட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் இன்று நடைபெற்றது.இதில் நகர்ப்புற மின் கோட்டத்திற்கு உட்பட்ட அனைத்து மின் பொறியாளர்களும் கலந்து கொண்டனர்.
மின் பொறியாளர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்ற போது எடுத்த படம்.
மின் பொறியாளர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்ற போது எடுத்த படம்.
Published on

நெல்லை:

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் சார்பாக நெல்லை மின் பகிர்மான வட்டம் நகர்புற கோட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் கே.டி.சி.நகரில் உள்ள செயற் பொறியாளர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.

கூட்டத்தில் நெல்லை மின் பகிர்மான வட்ட மேற்பார்வை மின் பொறியாளர் குருசாமி கலந்து கொண்டு பொதுமக்கள் அளித்த புகார்களுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க நகர்ப்புற கோட்ட செயற்பொறியாளர் முத்துகுட்டி உள்ளிட்ட மின் வாரிய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

இதில் நகர்ப்புற மின் கோட்டத்திற்கு உட்பட்ட அனைத்து மின் பொறியாளர்களும் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com